செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் இறந்து விட்டதாக வந்த வதந்தியால் அதிர்ச்சியடைந்த காமெடி நடிகர்…!

இறந்து விட்டதாக வந்த வதந்தியால் அதிர்ச்சியடைந்த காமெடி நடிகர்…!

இறந்து விட்டதாக வந்த வதந்தியால் அதிர்ச்சியடைந்த காமெடி நடிகர்…! post thumbnail image
நகைச்சுவை, குணச்சித்திரம் என்று எந்த பாத்திரம் கொடுத்தாலும் கனகச்சிதமாக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர். கோவை வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– சிறு வயது முதல் நடிப்பில் தீராத ஆர்வம் இருந்ததால் சினிமா உலகில் நுழைந்தேன். முதலில் நடிக்க எந்த வாய்ப்பும் அமையவில்லை. டப்பிங் படங்களில் பேசினேன். பின்னர் சின்னத்திரையில் நடித்தேன்.

எனது முதல் படம் ‘திருமதி ஒரு வெகுமதி’. அந்த படத்தில் நடித்த பின்னர் பெரிதாக என்னை காட்டிக்கொள்ள முடியவில்லை. சின்னத்திரையில் இருந்து சமீபத்தில் வெளியாகி உள்ள படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தது மகிழ்ச்சியளிக்கிறது. என்னுடன் அறிமுகம் ஆனவர்கள் தற்போது மிக உயர்ந்த நிலையில் இருப்பதை கண்டு பொறாமை அடைந்ததில்லை.

எனது எதிர்கால ஆசை என்னவென்றால் சிறந்த நடிகர் என்று மக்கள் சொல்லும்போது, இரவு கண் உறங்கும்போது உயிர் பிரிய வேண்டும். யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்கக் கூடாது என்பது தான்.

கமல் சாருடன் ‘உத்தமவில்லன்’, இந்தியா– பாகிஸ்தான், ‘நீ நல்லா வருவேடா’, ‘ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி’, ‘மொசக்குட்டி’ இன்னும் சில படங்கள் கைவசம் உள்ளது. எனக்கு என்ன கேரக்டர் கொடுத்துள்ளார்களோ அதில் உண்மையான ஈடுபாட்டுடனும் இயக்குனர் சொல்லும் வழிகாட்டுதலின்படியும் நடிப்பதே எனது வெற்றிக்கு காரணம் ஆகும்.

சமீபத்தில் நான் இறந்து விட்டதாக வந்த வதந்தியால் அதிர்ச்சியடைந்தேன். அப்போது நான் வீட்டில் தான் இருந்தேன். நான் ஷூட்டிங்கிற்காக வெளியூரோ? அல்லது வெளிநாடோ? சென்றிருந்தால் என்து குடும்பத்தில் உள்ளவர்கள் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பதை யோசித்து பாருங்கள். யார் இப்படி செய்தார்கள்? என்று தெரியவில்லை. இந்த விபரீத விளையாட்டெல்லாம் என்னோடு போகட்டும். இதுபோன்று எந்த நபருடனோ? அல்லது குடும்பத்துடனோ? விளையாட வேண்டாம் என்று கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி