செய்திகள்,திரையுலகம் விழா மேடையில் தூங்கி வழிந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்!…

விழா மேடையில் தூங்கி வழிந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்!…

விழா மேடையில் தூங்கி வழிந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்!… post thumbnail image
சென்னை:-வசந்தபாலன் இயக்கியுள்ள புதிய படம், காவியத்தலைவன். இந்த படத்தின் பிரஸ்மீட் சென்னையில் நடைபெற்றது. விழாவுக்கு, படத்தின் இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான், சித்தார்த், வசந்தபாலன், ஜெயமோகன், நாசர், பா.விஜய், வேதிகா, அனைகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.இந்த விழாவை நாசர் தொகுத்து வழங்கினார். மதியம் 1.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது.

அப்போது காவியத்தலைவன் படம் பற்றி விரிவாக பேசத் தொடங்கிய நாசர், ரஹ்மான் பற்றி பேசுகையில், ரோஜா படத்தின் பாடலை தான் முதன்முதலில் கேட்ட அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார். அதோடு, ஆஸ்கர் விருது பெற்றபோது, எல்லா புகழும் இறைவனுக்கே என்று தான் வணங்கும் கடவுளை நினைவுகூர்ந்த அவர், அதை தனது தாய்மொழியான தமிழிலேயே சொன்னதையும் மீண்டும் பதிவு செய்து கொண்டார்.இதையடுத்து பேசியவர்களும் ரஹ்மானை புகழ்கிறோம் என்று அனைவருமே தங்களது பங்குக்கு அவரது இசையைப்பற்றியே எடுத்து விட்டனர். இதன்காரணமாக விழா முடிவதற்கு கிட்டத்தட்ட 4 மணி ஆகி விட்டது. இதனால் பொறுமையாக மேடையில் அமர்ந்திருந்த ரகுமான், ஒரு கட்டத்தில் தூங்கத் தொடங்கி விட்டார். அவரது முகத்தில் கடுமையான தூக்க கலக்கம் இருந்தது.

இதை அவருக்கு முன்னதாக மைக் பிடித்து பேச வந்த சித்தார்த், விழா தொடங்கி அதிக நேரமாகி விட்டதால், ரகுமான் சாருக்கு தூக்கம் வந்து விட்டது. அதனால் நான் ரொம்ப நேரம் பேச மாட்டேன் என்று சொல்லி விட்டே பேசினார். அதையடுத்து, வந்த ரகுமான் தூக்க கலக்கத்தில இருந்ததாலோ என்னவோ, ஒரு நிமிடம மட்டுமே பேசிவிட்டு விடைபெற்று சென்றார்.அவர் பேசுகையில், நான் 3 தலைமுறைக்கு இசையமைத்திருக்கிறேன். மேலும், ஈரானிய இயக்குனர் மஸித் மஸித் என்பவரை ஒரு முறை சந்தித்தேன். அப்போது அவர், ஏன் உங்கள் கலாசாரத்தை விட்டு விட்டு மேற்கத்திய கலாச்சாரத்திலேயே இசையமைக்கிறீர்கள் என்று கேட்டார். அதனால் நம்முடைய கலாச்சாரத்தில் இசையமைத்துள்ள இந்த காவியத்தலைவன் படத்தை அவருக்கு நான் போட்டு காண்பிப்பேன் என்று சுருக்கமாக பேசி விட்டு சென்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி