செய்திகள்,முதன்மை செய்திகள் அமெரிக்கா, தென்கொரியாவுக்கு வடகொரியா மிரட்டல்!…

அமெரிக்கா, தென்கொரியாவுக்கு வடகொரியா மிரட்டல்!…

அமெரிக்கா, தென்கொரியாவுக்கு வடகொரியா மிரட்டல்!… post thumbnail image
சியோல்:-அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும், வடகொரியா தொடர்ந்து அணுக்குண்டு சோதனைகளை நடத்தியது. அதற்காக வடகொரியா மீது அந்த நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்தன. மேலும், கண்டம் விட்டு கண்டம் பாய்கிற ஏவுகணை சோதனைகளை நடத்தக்கூடாது என வடகொரியாவுக்கு ஐ.நா. சபை தடை விதித்துள்ளது.

இதையெல்லாம் மீறி அந்த நாடு தொடர்ந்து அத்தகைய ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. வடகொரியாவின் நடவடிக்கைகளால் ஆத்திரம் அடைந்துள்ள அமெரிக்காவும், தென்கொரியாவும் அந்த நாட்டுக்கு எதிராக கரம் கோர்த்து வரிந்து கட்டிக் கொண்டு வருகின்றன. இதற்கிடையே அமெரிக்காவும், தென் கொரியாவும் ஆண்டு தோறும் நடத்துகிற கூட்டு ராணுவ பயிற்சி இன்று கொரிய தீபகற்பப் பகுதியில் தொடங்குகிறது. இதில் இரு தரப்பிலும் சேர்த்து சுமார் 5 லட்சம் வீரர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த கூட்டுப்பயிற்சியில் கணினி முக்கிய இடம் வகிக்கிறது. இதற்கு வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இது தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசரமாகக் கூடி விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இந்த கூட்டுப்பயிற்சியை இரு நாடுகளும் கை விட வேண்டும் என்றும் கோரியது. ஆனால் அது நடைபெறவில்லை.இந்நிலையில் திட்டமிட்டபடி அமெரிக்கா-தென்கொரியா கூட்டு ராணுவப்பயிற்சி இன்று தொடங்குகிறது. இது வடகொரியாவை ஆக்கிரமிப்பதற்கான ஒத்திகையாக பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக அவ்விரு நாடுகளுக்கும் வடகொரியா கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக வடகொரியா விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-அமெரிக்கா, தென்கொரியா கூட்டு ராணுவப்பயிற்சி, அணுஆயுதப்போருக்கான ஒத்திகை ஆகும். எங்கள் மதி நுட்பத்தின்படி, எங்களுக்கே உரித்தான பாணியில் எந்த நேரத்திலும் ஈவிரக்கமின்றி கடுமையான தாக்குதல்களை தொடுப்போம் என்பதை நாங்கள் மீண்டும் உறுதிபட தெரிவிக்கிறோம். ஆக்கிரமிப்பாளர்களின் வலிமையை சுட்டுப் பொசுக்கி சாம்பலாக்குவதற்கு வடகொரிய வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி