செய்திகள்,விளையாட்டு இந்தியா – இங்கிலாந்து 5வது டெஸ்ட்: முதல் நாளில் இந்தியா 148 ரன்களுக்கு ஆல் அவுட்!…

இந்தியா – இங்கிலாந்து 5வது டெஸ்ட்: முதல் நாளில் இந்தியா 148 ரன்களுக்கு ஆல் அவுட்!…

இந்தியா – இங்கிலாந்து 5வது டெஸ்ட்: முதல் நாளில் இந்தியா 148 ரன்களுக்கு ஆல் அவுட்!… post thumbnail image
ஓவல்:-இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.இங்கிலாந்து அணி தொடரில் 2–1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.இந்நிலையில் இந்தியா–இங்கிலாந்து இடையிலான 5–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில்நடைபெற்றது.

இந்திய அணியில், ஜடேஜாவுக்கு பதிலாக ஸுடுவார்ட் பின்னி சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் பங்கஜ் சிங்கிற்கு பதிலாக இஷாந்த் சர்மா இடம் பெற்றனர்.இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் குக் தனது அணி முதலில் பந்து வீசவும் என தெரிவித்தார். இதைதொடர்ந்து இந்திய அணி முதலில் பேட் செய்தது. இந்த போட்டியிலும் இங்கிலாந்து அணி பந்து வீச்சை எதிர்கொள்ளாமல் இந்திய வீரர்கள் வரிசையாக நடையை கட்டினார்.

இதில் இந்திய அணி 148 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் கேப்டன் தோனி 82 ரன்களும், முரளி விஜய் 18 ரன்களும், அஷ்வின் 13 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து வீரர்களின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்து களம் இறங்கிய அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்கங்களில் விக்கெட்டை இழந்தனர். இதில் இங்கிலாந்து வீரர்கள் வோக்ஸ் 3, ஜோர்டன் 3, ஆன்டர்சன் 2, ப்ராட் 2 விக்கெட் எடுத்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி