செய்திகள் பூனைகளுக்கு சொத்தை எழுதிவைத்த அமெரிக்கர்!…

பூனைகளுக்கு சொத்தை எழுதிவைத்த அமெரிக்கர்!…

பூனைகளுக்கு சொத்தை எழுதிவைத்த அமெரிக்கர்!… post thumbnail image
அமெரிக்கா:-அமெரிக்கர் ஒருவர் ஆதரிக்க ஆளில்லாமல் தவித்து வருகிற பூனைகளுக்காக தன் ஒட்டுமொத்த சொத்தையும் விட்டுச் சென்றுள்ளார்.அந்த அதிசய மனிதரின் பெயர் ஜேம்ஸ் டால்பாட். இவருக்கு செல்லப்பிராணிகள் என்றால் உயிர். கிட்டி என்ற செல்லப்பூனையை ஆசை, ஆசையாக வளர்த்து வந்தார்.

தன் வாழ்நாளில் சம்பாதித்த சொத்துக்களையெல்லாம் இவர் செல்லப்பிராணிகள் நலனுக்காக விட்டுச்சென்று விட்டார். அதில் இருந்து ஒரு பூனைகள் காப்பகத்துக்கு 1 லட்சத்து 60 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.96 லட்சம்) நன்கொடை வழங்கப்பட்டிருக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி