செய்திகள்,திரையுலகம் ஐ படத்துக்காக 2 வருடம் தவமிருந்த நடிகர் விக்ரம்!…

ஐ படத்துக்காக 2 வருடம் தவமிருந்த நடிகர் விக்ரம்!…

ஐ படத்துக்காக 2 வருடம் தவமிருந்த நடிகர் விக்ரம்!… post thumbnail image
சென்னை:-ஆஸ்கர் பிலிம்ஸ் இதுவரை தயாரித்துள்ள படங்களில் அதிக பட்ஜெட்டில் 150 கோடியில் தயாராகியுள்ள படம் ‘ஐ’. பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்எமி ஜாக்சன் நடித்துள்ள இந்த படம் 2012ல் தொடங்கப்பட்டது. இந்த படத்தை தமிழ், தெலுங்கு. இந்தி என மூன்று மொழிகளில் எடுத்துள்ள ஷங்கர், இன்னும் சில மொழிகளிலும் டப் செய்து வெளியிடுகிறாராம். அதில் சீன மொழியும் ஒன்றாம். அந்த வகையில், ஜப்பான் மொழியில் ரஜினி நடித்த படங்கள் டப் செய்யப்பட்டு வெளியாகி வரும் நிலையில், சீன மொழியில் டப் செய்யப்படும் முதல் படமாக ஐ இடம்பெறுகிறது.

இந்த படத்தில் தான் நடித்தது பற்றி விக்ரம் கூறுகையில், ஷங்கர் சார் படம் என்றாலே எனக்கு ஸ்பெசல்தான். அந்த வகையில் அந்நியன் படத்தை நான் மறக்க முடியாது. அதில் மூன்று விதமான கெட்டப்புகளில் நடித்திருந்தேன். ஒவ்வொரு கெட்டப்புக்கேற்பவும் பாடி லாங்குவேஜை மாற்றி நடித்தேன். ஆனால் இந்த ஐ படத்தில் அதைவிட கடுமையாக உழைத்திருக்கிறேன்.முக்கியமாக, 60 கிலோ எடையில் நடித்த நான் திடீரென்று 125 கிலோவுக்கு மாறினேன். அதையடுத்து, 90 கிலோவுக்கு மாறினேன். இப்படி கேரக்டரின் தன்மைக்கேற்ற எனது உடல்மொழியையும் மாற்றிக்கொண்டே வந்தேன். அந்த வகையில் ஐ படத்துக்காக 2 வருடங்களாக நான் தவம் இருந்தேன் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் அந்த கடின உழைப்புக்கேற்ற பலனை ஷங்கர் சார் அவுட்புட்டில் காண்பித்து விடுவார் என்பதால் பெரிய சந்தோசமும் உள்ளது என்கிறார் விக்ரம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி