செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் இரண்டு நாட்களில் 56 பேர் எபோலா நோய்க்கு பலியானதாக உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு!…

இரண்டு நாட்களில் 56 பேர் எபோலா நோய்க்கு பலியானதாக உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு!…

இரண்டு  நாட்களில் 56 பேர் எபோலா நோய்க்கு பலியானதாக உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு!… post thumbnail image
ஜெனிவா:-ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வரும் எபோலா நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை கடந்த வாரம் ஆயிரத்தை கடந்தது.இந்நிலையில், எபோலா நோய்த்தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த மேலும் 56 பேர் கடந்த இரண்டே நாட்களில் பலியானதாகவும், இதன் மூலம் உலகளாவிய அளவில் இந்நோயின் தாக்கத்தால் பலியானோரின் எண்ணிக்கை 1,069 ஆக உயர்ந்துள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லைபிரியாவில் 32 பேரும், சியெரா லியோனில் 19 பேரும், கினியாவில் 4 பேரும், நைஜீரியாவில் ஒருவரும் என மொத்தம் 56 பேர் கடந்த இரண்டே நாட்களில் எபோலாவினால் பலியானதாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட செய்தி குறிப்பு தெரிவிக்கின்றது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி