செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை ரூ.2.31 குறைவு!…

இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை ரூ.2.31 குறைவு!…

இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை ரூ.2.31 குறைவு!… post thumbnail image
புதுடெல்லி:-சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்துக்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கி உள்ளது. அதன்படி சர்வதேச விலை நிலவரம் மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

இந்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இதையொட்டி இந்தியாவில் பெட்ரோல் விலை குறைய வாய்ப்பிருப்பதாகவும், இது குறித்த அறிவிப்பு சுதந்திர தினத்தையொட்டி வெளியாகும் என்றும் இந்தியன் ஆயில் நிறுவன தலைவர் பி.அசோக் நேற்று முன்தினம் தெரிவித்தார்.இதை பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் நேற்று உறுதி செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் இணையதளத்தில் கூறுகையில், நாடு முழுவதும் பெட்ரோல் விலை ரூ.1.89 முதல் ரூ.2.38 வரை குறைகிறது.

டெல்லியில் ரூ.2.18 குறைகிறது. இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.இந்த புதிய விலைப்படி சென்னையில் லிட்டருக்கு ரூ.2.31 குறைகிறது. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.73.47–க்கு விற்பனையாகும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி