செய்திகள்,விளையாட்டு இந்தியா – இங்கிலாந்து கடைசி டெஸ்ட் நாளை தொடக்கம்!…

இந்தியா – இங்கிலாந்து கடைசி டெஸ்ட் நாளை தொடக்கம்!…

இந்தியா – இங்கிலாந்து கடைசி டெஸ்ட் நாளை தொடக்கம்!… post thumbnail image
ஓவல்:-இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டித் தொடரில் நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2–வது டெஸ்டில் இந்தியா வரலாற்று சிறப்பு வெற்றியை பெற்றது.இந்த முன்னிலையை தக்க வைத்துக்கொள்ள இந்திய அணி தவறிவிட்டது. 3–வது மற்றும் 4–வது டெஸ்டில் மோசமாக தோற்று 1–2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.இந்தியா– இங்கிலாந்து அணிகள் மோதும் 5–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.

கடந்த 2 டெஸ்டிலும் ஏற்பட்ட மாற்றத்தில் பலன் இல்லாததால் நாளை டெஸ்டில் டோனி மாற்றம் செய்வாரா? மாட்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.தவான், ரோகித்சர்மா அல்லது ஸ்டுவர்ட் பின்னி ஆகியோர் கடைசி டெஸ்டில் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த 2 டெஸ்டில் காயத்தால் விளையாடாத இஷாந்த்சர்மா நாளைய டெஸ்டில் இடம் பெறலாம் என்ற நம்பிக்கை உள்ளது.நேற்றைய பயிற்சியில் அவர் பங்கேற்றார். உடல் தகுதியை பொறுத்து அவரது தேர்வு இருக்கும்.இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேனான வீராட் கோலியின் ஆட்டம் இந்த டெஸ்டில் மிகவும் மோசமாக உள்ளது. 4 டெஸ்டில் 108 ரன்களே (8 இன்னிங்ஸ்) எடுத்துள்ளார். சராசரி 13.50 ஆகும். ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை.இதேபோல புஜாரா 8 இன்னிங்சில் 207 ரன்களே எடுத்துள்ளார். சராசரி 25.7 ஆகும். இந்த இருவரும் நிலைத்து நின்று ஆடுவது அவசியமாகும்.

தொடக்கத்தில் சிறப்பாக ஆடிய முரளிவிஜய், ரகானே கடந்த 2 டெஸ்டில் ஏமாற்றம் அளித்தனர். இதனால் அவர்களும் சிறப்பாக ஆடினால் தான் முன்னேற்றம் காண முடியும்.முன்னணி பேட்ஸ்மேன்கள் திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே தோல்வியை தவிர்க்க முடியும். இங்கிலாந்தை வீழ்த்த இந்திய வீரர்கள் அனைவரும் ஒன்றுபட்டு விளையாட வேண்டும்.இங்கிலாந்து அணி மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. ‘டிரா’ செய்தாலே அந்த அணி தொடரை கைப்பற்றிவிடும். ஆனால் இங்கிலாந்தோ 3–1 என்ற கணக்கில் தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.அந்த அணியின் பவுலர்களான ஆண்டர்சன், மொய்ன் அலி, ஸ்டூவர்ட் பிராட் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக உள்ளனர்.நாளைய டெஸ்ட் இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் கிரிக்கெட் சேனலில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி