செய்திகள்,திரையுலகம் தமிழில் தாக்குப் பிடிக்க முடியாத இசையமைப்பாளர்!…

தமிழில் தாக்குப் பிடிக்க முடியாத இசையமைப்பாளர்!…

தமிழில் தாக்குப் பிடிக்க முடியாத இசையமைப்பாளர்!… post thumbnail image
சென்னை:-ஷங்கர் இயக்கிய ‘பாய்ஸ்’ படத்தில் அறிமுகமான ஐந்து இளைஞர்களில் ஒருவரான தமன் அதன் பின் இசையமைப்பாளராகிவிட்டார்.2009ல் வெளியான ‘சிந்தனை செய்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானாலும் அதன் பின் வெளிவந்த ‘ஈரம்’ படமே அவரை அடையாளம் காட்டியது. தொடர்ந்து அவர் பல தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்தாலும் ‘காஞ்சனா, காதலில் சொதப்புவது எப்படி, கண்ணா லட்டு திண்ண ஆசையா’ ஆகிய படங்கள் மட்டுமே அவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்தது.

ஆர்யா, விஷால், கார்த்தி ஆகியோர் நடித்த படங்களுக்கு இசையமைத்தாலும் தமிழில் மட்டும் இன்னும் முன்னணி இசையமைப்பாளராக வர முடியாமல் தவித்து வருகிறார். தெலுங்கைப் பொறுத்தவரை இப்போதைக்கு அவர் தான் நம்பர் 1 இசையமைப்பாளராக இருக்கிறார். அவர் இசையமைத்துள்ள ‘ரபாஷா, பவர்’ ஆகிய படங்களின் இசை வெளியீடு கடந்த வாரம்தான் நடைபெற்றது.

தமிழில் அடுத்து ஆர்யா நடிக்கும் ‘மீகாமன்’, படத்தைத்தான் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீடு விரைவில் நடைபெற உள்ளது. தெலுங்கில் புகழும், பெயரும் கிடைத்து விட்டாலும், தமிழில் மட்டும் தடுமாற்றத்துடனேயே இருக்கிறார். ஒரு மிகப் பெரிய வெற்றிப் படம் அமைந்து விட்டால் இங்கும் முன்னணிக்கு வந்துவிடுவார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி