செய்திகள்,திரையுலகம் சம்பளம் கேட்காமல் நடித்த பிரபல நடிகை!…

சம்பளம் கேட்காமல் நடித்த பிரபல நடிகை!…

சம்பளம் கேட்காமல் நடித்த பிரபல நடிகை!… post thumbnail image
சென்னை:-‘இரவும் பகலும்’ தலைப்பில் படம் இயக்கி வருகிறார் ஏ.வெங்கடேஷின் உதவியாளர் பாலஸ்ரீராம். குரு காணிக்கையாக ஏ.வெங்கடேஷை போலீஸ் அதிகாரியாக நடிக்க வைத்திருக்கிறார். அங்காடி தெரு மகேஷ் ஹீரோ, அனன்யா ஹீரோயின். ஜெகன் காமெடி செய்கிறார்.

பகலில் என்ஜீனியரிங் படிக்கும் ஹீரோ இரவில் திருடனாக இருக்கிறார். அவர் திருடுவது எதற்காக அதனால் என்ன விளைவுகள் ஏற்படுகிறது என்பது படத்தின் கதை. படத்தின் கதையை அனன்யாவிடம் சொன்னதும் சம்பளம் பற்றி பேசாமலேயே நடிக்க ஒப்புக் கொண்டார். ஒரு ரூபாய் மட்டும் அடவான்ஸ் பெற்றுக் கொண்டார்.

நடித்து முடித்தும் நாங்கள் கொடுத்த சம்பளத்தை வாங்கிக் கொண்டார். இதில் அனன்யாவின் நடிப்பு பேசப்படுவதாக இருக்கும். நாமக்கல், தொட்டியம் பகுதியில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். நாமக்கல்லில் உள்ள ஒரு கல்லூரிதான் கதையின் களம் என்கிறார் இயக்குனர் பாலஸ்ரீராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி