செய்திகள்,திரையுலகம் ‘அஞ்சான்’ படத்தின் கதை கசிந்தது!…

‘அஞ்சான்’ படத்தின் கதை கசிந்தது!…

‘அஞ்சான்’ படத்தின் கதை கசிந்தது!… post thumbnail image
சூர்யா, வித்யுத் ஜமால் இருவரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். மும்பையை ஆட்டிப் படைக்கும் ரவுடிகள். இருவரும் சேர்ந்தாலே மும்பையில் உள்ளவர்களுக்கு கதி கலங்குமாம். எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் இவர்களை கொலை செய்யத் துடிக்கிறார்கள். அவர்களால் வித்யுத் ஜமால் கொல்லப்பட சூர்யா காணாமல் போய் விடுகிறார்.

அதன் பின் சூர்யாவைத் தேடி அவருடைய தம்பியான இன்னொரு சூர்யா மும்பைக்கு வருகிறார். தம்பி சூர்யா, அண்ணன் சூர்யாவைக் கண்டுபிடித்தாரா, உண்மையிலேயே அண்ணன் சூர்யா காணாமல் போனாரா, அல்லது அவர்தான் தம்பி போல மீண்டும் வந்து வித்யுத்தைக் கொன்றவர்களைப் பழி வாங்குகிறாரா என்பதுதான் படத்தின் மீதி கதையாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி