செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனிக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு!…

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனிக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு!…

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனிக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு!… post thumbnail image
ராஞ்சி:-இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் டோனி.20 ஓவர் உலக கோப்பை (2007), 50 ஓவர் உலக கோப்பை (2011) ஆகியவற்றை பெற்றுக்கொடுத்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் ஆவார்.டோனிக்கு மாவோயிஸ்ட் மற்றும் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருந்ததால் கடந்த 2011ம் ஆண்டு முதல் ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே டோனியின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. இசட் பிரிவில் இருந்து ‘ஒய்’ பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளது. இதை ஜார்க்கண்ட் மாநில போலீஸ் டி.ஜி.பி ராஜீவ்குமார் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:–முக்கிய வி.ஐ.பி.களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு குறித்து ஒவ்வொரு ஆண்டும் மறுஆய்வு செய்யப்படும். இந்திய அணி கேப்டன் டோனிக்கு எந்தவித மிரட்டலும் இல்லை என்று உளவுத்துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவே அவரது பாதுகாப்பு இசட் பிரிவில் இருந்து ‘ஒய்’ பிரிவாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் டோனிக்கு அளித்து வரும் பாதுகாப்பில் எந்தவித குறையும் இருக்காது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி