செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் பெப்சி தலைவராக சிவா தேர்வு!…

பெப்சி தலைவராக சிவா தேர்வு!…

பெப்சி தலைவராக சிவா தேர்வு!… post thumbnail image
சென்னை:-தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் கீழ் 23 சங்கங்கள் உள்ளன. இந்த சங்கங்களின் தலைமை அமைப்பாக பெப்சி செயல்படுகிறது. இதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கும். இதில் 23 சங்கங்களைச் சேர்ந்த 63 நிர்வாகிகள் வாக்களித்து புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வார்கள்.

கடந்த முறை இயக்குனர் அமீர் தலைமையிலான நிர்வாகிகள் வெற்றி பெற்றனர். இந்த முறை அமீர் போட்டியிடவில்லை. இதனால் செயலாளராக இருந்த ஜி.சிவா தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். அவரை எதிர்த்து சண்டை இயக்குனர் சிவா போட்டியிட்டார். செயலாளர் பதவிக்கு கே.ஆர்.செல்வராஜ், உமா சங்கர் பாபு போட்டியிட்டனர்.நேற்று நடந்த தேர்தலில் ஜி.சிவா 49 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். செயலாளர் பதவிக்கு கே.ஆர்.செல்வராஜ் 44 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.

பொருளாளராக எஸ்.சந்திரன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர்கள் தவிர துணை தலைவர்களாக ஜீவானந்தம், மூர்த்தி, ராமன், சபரிகிரிசன், சம்பத், ஆகியோரும், துணை செயலாளர்களாக தனபால், ராதா, ராஜா, ரமணபாபு, ஸ்டாலின் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.தேர்வு பெற்றவர்கள் நேற்று மாலையே பதவியேற்றுக் கொண்டனர். நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி.சிவா, பொருளாளர் ராதாகிருஷ்ணன், இயக்குனர்கள் சங்க பொருளாளர் வி.சேகர் ஆகியோர் வெற்றி பெற்றவர்களை நேரில் வாழ்த்தினார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி