செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் கத்தி படத்தை எதிர்க்க மாட்டேன் – சீமான் அறிவிப்பு!…

கத்தி படத்தை எதிர்க்க மாட்டேன் – சீமான் அறிவிப்பு!…

கத்தி படத்தை எதிர்க்க மாட்டேன் – சீமான் அறிவிப்பு!… post thumbnail image
சென்னை:-விஜய், சமந்தா நடித்து வரும் ‘கத்தி‘ படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இதனை லைக்கா என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இது இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் நண்பரின் நிறுவனம் என்று செய்திகள் வெளியானது. ஆனால், இதற்கும் ராஜபக்ஷேவுக்கும் சம்பந்தம் இல்லை என்று தயாரிப்பு நிறுவனம் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசும், தயாரிப்பாளர்களில் ஒருவரான ஐங்கரன் கருணாமூர்த்தியும் சீமான், நெடுமாறன், ராமதாஸ், தொல் திருமாவளவன், வைகோ ஆகியோரை சந்தித்து விளக்கம் அளித்துள்ளனர். லைக்கா நிறுவனத்தின் அடுத்த படத்தை சீமான் இயக்க இருக்கிறார். அதற்காகத்தான் அவர் கத்தி பட விஷயத்தில் மவுனம் சாதிக்கிறார் என்று கூறப்பட்டது.இதுகுறித்து சீமான் அளித்துள்ள விளக்கம் வருமாறு: என்னை படம் இயக்கத் சொல்லி கலைப்புலி எஸ்.தாணு இரண்டு வருடமாக வற்புறுத்தி வருகிறார். அப்படி இருக்கும்போது நான் ஏன் இன்னொரு தயாரிப்பு நிறுவனத்தை நாட வேண்டும். இது கற்பனையான ஒன்று.

தமிழ் உணர்வை புண்படுத்திய மெட்ராஸ் கபே, இனம் படங்களை எதிர்த்தோம். கத்தி படத்தை எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. படம் வெளியானால்தானே அதில் என்ன இருக்கிறது என்பதே தெரியவரும். அதற்கு முன்பே எப்படி படத்தை விமர்சிப்பது. அதை தயாரிப்பவர்கள் பற்றி சில தகவல்களை சொல்கிறார்கள். அது உண்மையா என்று தெரியாமல் நான் ஏன் படத்துக்கு எதிராக நிற்க வேண்டும். நான் எதிர்க்க வேண்டும் என்பவர்கள் எனக்காக ஏன் காத்திருக்க வேண்டும், அவர்களே எதிர்க்கட்டும் என்கிறார் சீமான்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி