செய்திகள் முன்னாள் மனைவியின் ஆபாசப் படங்களை பேஸ்புக்கில் வெளியிட்டவர் கைது!…

முன்னாள் மனைவியின் ஆபாசப் படங்களை பேஸ்புக்கில் வெளியிட்டவர் கைது!…

முன்னாள் மனைவியின் ஆபாசப் படங்களை பேஸ்புக்கில் வெளியிட்டவர் கைது!… post thumbnail image
ஐதராபாத்:-ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த அஷ்வாக் வானி என்பவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஐதராபாத்தின் ஷமீர்பூர் இருக்கும் ஒரு உறைவிடப் பள்ளியில் பணியாற்றிக் கொண்டு அருகாமையில் உள்ள அட்டாபூரில் மனைவியுடன் குடியிருந்து வந்துள்ளார்.தனது இளம் வயது மனைவி, அவரது சகோதரியின் கணவருடன் கள்ளத் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகித்த அஷ்வாக், தற்போது குடியிருக்கும் வீட்டை காலி செய்து விட்டு, ஷமீர்பூரில் தான் பணிபுரியும் பள்ளியருகே வேறு வீடு பார்த்துக் கொண்டு சென்று விடலாம் என்று மனைவியிடம் கூறியுள்ளார்.

தற்போது வசிக்கும் வீட்டின் அருகாமையில் இருக்கும் ஒரு பள்ளியில் டீச்சராக வேலை பார்த்து வரும் அந்தப் பெண் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து, ஏற்பட்ட தகராறில் வீட்டில் இருந்த தனது பொருட்களை எல்லாம் வாரி எடுத்துக் கொண்ட அஷ்வாக், தான் வேலை செய்யும் பள்ளியருகே ஒரு வீட்டில் குடியேறி தனியாக வசித்து வருகிறார்.இதற்கிடையே, கடந்த டிசம்பர் மாதம் இவர்களுக்குள் விவாகரத்தும் நடந்து விட்டது.இந்நிலையில், சில மாதங்களாக அவரது மனைவியின் குடும்பத்தாரின் செல்போன்களுக்கு ஆபாச ‘எஸ்.எம்.எஸ்.’களும், மிரட்டல் அழைப்புகளும் வரத் தொடங்கின.

மேலும், சில பெண்களின் நிர்வாண உடலில் தனது மனைவியின் முகத்தை ’மார்ஃபிங்’ முறையில் ஒட்ட வைத்து, போலிப் பெயரில் பேஸ்புக்கில் கணக்கு தொடங்கி, அந்த படங்களை யாரோ சிலர் அவ்வப்போது பதிவேற்றம் செய்து வந்துள்ளனர்.இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண் சைபராபாத் போலீசில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த அதிகாரிகள், தனது பேச்சை மதிக்காத முன்னாள் மனைவியை பழிவாங்கும் நோக்கத்தில் இவற்றை எல்லாம் செய்து வந்த அஷ்வாக்கை கைது செய்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி