கொச்சி:-மலையாள திரையுலகின் முன்னணி இளம் கதாநாயகர்களில் ஒருவர் பஹத் பாசில். இவர், ‘மணிரத்னம்’ என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். நேற்று கொச்சி பஸ் நிலையம் அருகே இப்படத்தின் படப்பிடிப்பில் பஹத் பாசில் பங்கேற்று நடித்தார்.
பஸ்சில் இருந்து இறங்குவது போன்ற காட்சியில் நடித்தபோது, பஸ்சில் அவரது தலை இடித்ததால் தலையில் காயம் ஏற்பட்டது. அவர் கொச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய வருங்கால மனைவியும், நடிகையுமான நஸ்ரியா, ஆஸ்பத்திரிக்கு சென்று அவரை பார்த்தார். சிகிச்சைக்கு பிறகு, பஹத் பாசில் வீடு திரும்பினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி