அப்படிப்பட்ட சுரேஷ்கோபி, சமீபத்தில் ஆருண்முலா விமான நிலையம் அமைப்பது சம்பந்தமாக கேரள முதல்வர் உம்மன் சாண்டி சொன்ன ஒரு கருத்து தவறாக இருக்கவே, எந்த பிரச்சினையாக இருந்தாலும் ஒரு பொறுப்பில் இருப்பவர்கள் சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்தவர்களிடம் கேட்டறிந்த பிறகே அது பற்றி கருத்து சொல்ல வேண்டும் என்று முதல்வரையே தைரியமாக விமர்சித்துள்ளார்.
சினிமாவில் தான் முதல்வர்களைப் பார்த்து அதிரடியாக பதிலடி கொடுக்கும் சுரேஷ்கோபி, இப்போது நிஜ முதல்வரையே விமர்சித்துள்ள இந்த விவகாரம் கேரள அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாம். ஆனால், சக நடிகர்களோ சுரேஷ்கோபியின் இந்த துணிச்சலை பக்கம் பக்கமாக பாராட்டி வருகிறார்களாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி