செய்திகள்,திரையுலகம் வாலில் தீ வைத்தால்தான் ராக்கெட் மேலே செல்லும் – நடிகர் அஜீத்தின் அட்வைஸ்!…

வாலில் தீ வைத்தால்தான் ராக்கெட் மேலே செல்லும் – நடிகர் அஜீத்தின் அட்வைஸ்!…

வாலில் தீ வைத்தால்தான் ராக்கெட் மேலே செல்லும் – நடிகர் அஜீத்தின் அட்வைஸ்!… post thumbnail image
சென்னை:-சமீபகாலத்து நடிகர்களெல்லாம் கதை சொல்ல வரும் டைரக்டர்களை பஞ்சர் பண்ணி விடுகிறார்கள். அந்த அளவுக்கு சீன் பை சீன் கதையை கேட்பவர்கள். பின்னர் தாங்கள் அவர்களுக்கு முதலில் இருந்தே கடைசி வரை அதே கதையை ரிப்பீட்டு செய்வார்கள். அதைக்கேட்டு தங்களது கதை தலை ஒரு பக்கம் வால் ஒருபக்கம் இடமாறிப்போயிருப்பதைப்பார்த்து தலை சுற்றிப்போவார்கள் டைரக்டர்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், அஜீத் மட்டும் மாறுபட்டவராக இருக்கிறார். டைரக்டர் சரண் அவரிடத்தில் காதல் மன்னன் படத்தின் கதையை சொல்ல சென்றபோது, இரண்டு லைன் மட்டும்தான் கேட்டாராம். இதை ஆயிரத்தில் இருவர் படத்தின் டீஸர் வெளியீட்டு விழாவின்போது தெரிவித்த டைரக்டர் சரண், அஜீத்திடம் பேசிக்கொண்டிருக்கும்போது எப்போதுமே தீயாக இருக்க வேண்டும்ஜி என்பார். வாலில் தீயை வைத்தால்தான் ராக்கெட் மேல்நோக்கி செல்லும் என்றும் அதற்கு உதாரணம் சொல்வார் என்று அஜீத்தை வைத்து தான் இயக்கிய படங்களின்போது நடந்த சில பாசிட்டீவான விசயங்களையும் பகிர்ந்து கொண்டார் சரண்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி