செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் 2020ம் ஆண்டுக்குள் நிலக்கரி பயன்பாட்டை தடை செய்ய சீனா முடிவு!…

2020ம் ஆண்டுக்குள் நிலக்கரி பயன்பாட்டை தடை செய்ய சீனா முடிவு!…

2020ம் ஆண்டுக்குள் நிலக்கரி பயன்பாட்டை தடை செய்ய சீனா முடிவு!… post thumbnail image
பீஜிங்:-வர்த்தகம், பொருளாதாரம், உட்கட்டமைப்பு போன்ற துறைகளில் மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக வளர்ச்சி பெற்றுவரும் சீனா அதிகரித்துவரும் சுற்றுப்புற சூழல் மாசுத்தன்மையிலும் தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.அந்நாட்டில் வளர்ந்துவரும் நடுத்தர வர்க்கத்தினரின் பயன்பாட்டினால் நீர் மற்றும் மண் கலப்படம் உயர்ந்துள்ளதும், காற்று மாசுபாடுகளால் பனிப்புகை அழுத்தம் அதிகரித்து வருவதுவும் அரசுக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது. இந்த சுற்றுப்புற சூழல் சீர்கேட்டினை சரிசெய்ய வேண்டிய நிர்ப்பந்தம் மத்திய அரசுக்கு அதிகரித்து வருகின்றது.

இதனைத் தொடர்ந்து வரும் 2020ஆம் ஆண்டுக்குள் பீஜிங் உட்பட சீனாவின் முக்கிய நகரங்களில் நிலக்கரி பயன்பாடு தடை செய்யப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.கடந்த 2012ஆம் வருடத்திய கணக்கெடுப்பின்படி பீஜிங்கில் மூன்று மாதங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட நிலக்கரியின் அளவானது அங்குள்ள காற்றின் மாசுத்தன்மையில் 22 சதவிகித துகள்களைக் கலந்திருந்தது. இது தவிர அதிகரித்துள்ள வாகனங்கள்,
தொழிற்சாலை உற்பத்தி மற்றும் பொது மாசுபாடு ஆகியவை கூட 21 மில்லியன் மக்கள் வாழும் இந்த நகரத்தின் மாசுத்தன்மைக்கு காரணமாக உள்ளன. கடந்த செப்டம்பரில் பீஜிங், ஷாங்காய் மற்றும் குவாங்க்ஷு ஆகிய நகரங்களில் நிலக்கரியை எரிபொருளாக உபயோகிக்கும் புதிய அனல் மின் நிலையங்களுக்குத் தடை விதித்திருந்தது.

இருப்பினும், இந்தத் தடையையும் மீறி நிலக்கரி பயன்பாடு சீன மக்களிடையே அதிகரித்தே காணப்படுகின்றது. பசுமை வாயுக்கள் வெளியேறுவதற்கு இந்த செயல்முறையும் ஒரு முக்கிய காரணமாக விளங்குவதால் நிலக்கரியை முற்றிலும் தடை செய்யும் புதிய அறிவிப்பை தற்போது சீன அரசு வெளியிட்டுள்ளது.இதற்கு பதிலாக வெப்ப மின்சாரம் மற்றும் இயற்கை எரிவாயு பயன்பாட்டினை மக்கள் அதிகரித்துக்கொள்ள வேண்டும் என்று பீஜிங் மாநகர சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் அரசு இணையதளத்தில் செய்தி ஒன்றினை நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி