செய்திகள்,திரையுலகம் விஜய்யின் கத்தி படத்திற்கு ஆதரவாக பேசிய இயக்குனர் விக்ரமன்!…

விஜய்யின் கத்தி படத்திற்கு ஆதரவாக பேசிய இயக்குனர் விக்ரமன்!…

விஜய்யின் கத்தி படத்திற்கு ஆதரவாக பேசிய இயக்குனர் விக்ரமன்!… post thumbnail image
சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா ஜோடியாக நடித்து வரும் படம் கத்தி. இப்படம் ஆரம்பிக்கும் போது எவ்வித பிரச்சனையும் இல்லாமல் ஆரம்பித்தது.ஆனால் இடையில் இப்படத்தை தயாரிப்பவர்கள் ராஜபக்சேவின் கூட்டாளிகள் என்ற செய்தி வெளிவந்தது. இதனை அறிந்ததில் இருந்து தமிழ் அமைப்புகள் பல்வேறு எதிர்ப்புகளை காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இயக்குனர் சங்கத் தலைவர் விக்ரமன், கத்தி பட தயாரிப்பாளர் சுபாஸ்கரன் அல்லிராஜாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார்.அவர் கூறியதாவது, விஜய்யின் கத்தி படத்தை எடுத்து வரும் ஐயங்கரன் கருணாமூர்த்தியும், லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் அல்லிராஜாவும் இருவருமே இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள் தான்.ஐயங்கரன் கருணாமூர்த்தி தான் முதன்முறையாக தமிழ் படங்களை வாங்கி வெளிநாடுகளில் வெளியிட்டவர். இருவருமே தமிழர்கள் தான் என்று கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி