செய்திகள்,திரையுலகம் ‘ஜிகர்தண்டா’ படத்தின் திருட்டு சி.டி வெளியீடு!…

‘ஜிகர்தண்டா’ படத்தின் திருட்டு சி.டி வெளியீடு!…

‘ஜிகர்தண்டா’ படத்தின் திருட்டு சி.டி வெளியீடு!… post thumbnail image
சென்னை:-ஜிகர்தண்டா திரைப்படத்தின் திருட்டு சி.டி.யை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் சென்னை பெருநகர காவல்துறை ஆணையரிடம் செவ்வாய்க்கிழமை புகார் செய்தனர்.இதுகுறித்து அந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.கதிரேசன், சென்னை பெருநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜை செவ்வாய்க்கிழமை சந்தித்து கொடுத்த மனு:

‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ ஆகிய திரைப்படங்களை நான் ஏற்கெனவே தயாரித்து வெளியிட்டிருக்கிறேன். இதில் “ஆடுகளம்’ திரைப்படத்துக்கு தேசிய விருது கிடைத்தது.நான் தயாரித்து, நடிகர் சித்தார்த், லட்சுமிமேனன், அம்பிகா, நாசர் ஆகியோர் நடித்த “ஜிகர்தண்டா’ திரைப்படம் கடந்த 1-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்தத் திரைப்படம் வெளியிடப்பட்ட அன்றே திருட்டு சி.டி.யும் வெளியாகிவிட்டது. இதனால் பல கோடி ரூபாய் எனக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலை நீடித்தால் தமிழ்த் திரைப்படத் துறை நலிந்துவிடும்.

திரைப்படத் துறையை நம்பி வாழும் பல ஆயிரம் குடும்பங்களும் பாதிக்கப்படும். எனவே, காவல்துறை இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.தயாரிப்பாளர் கதிரேசனுடன் இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் பார்த்திபன், தயாரிப்பாளர்கள் தாணு, பிரமிட் நடராஜன், சித்ரா லட்சுமணன், சண்டை பயிற்சியாளர் ஜாகுவார் தங்கம் ஆகியோர் வந்திருந்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி