செய்திகள்,விளையாட்டு 4வது டெஸ்டில் வருண் ஆரோனுக்கு வாய்ப்பு கொடுக்க கங்குலி வலியுறுத்தல்!…

4வது டெஸ்டில் வருண் ஆரோனுக்கு வாய்ப்பு கொடுக்க கங்குலி வலியுறுத்தல்!…

4வது டெஸ்டில் வருண் ஆரோனுக்கு வாய்ப்பு கொடுக்க கங்குலி வலியுறுத்தல்!… post thumbnail image
கொல்கத்தா:-டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டித் தொடரில் 3 டெஸ்ட் முடிந்துள்ளது. தொடர் 1–1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. 4–வது டெஸ்ட் போட்டி வருகிற 7ம் தேதி மான்செஸ்டரில் தொடங்குகிறது.இந்த டெஸ்டில் வேகப்பந்து வீரர் வருண் ஆரோனுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று இந்திய அணி முன்னாள் கேப்டன் கங்குலி வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:–

மான்செஸ்டர் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் இருக்கும். இதனால் வருண் ஆரோனை அணியில் சேர்க்க வேண்டும். இந்திய அணியின் பேட்டிங் மோசமான நிலையில் இருக்கிறது. இதற்காக தவான் இடத்தில் காம்பீரை சேர்க்க வேண்டும் என்று கூறவில்லை. தற்போதுள்ள நிலையில் அணிக்கு புதிய யுக்திகள் தேவை.மேற்கு வங்காளதேசத்தை சேர்ந்த முகமது ஷமியின் பந்துவீச்சு இங்கிலாந்து தொடரில் ஏமாற்றம் அளிக்கிறது. இதற்கு இடைவிடாத போட்டி தான் காரணம் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் இந்த வயதில் கிரிக்கெட் விளையாடவில்லை என்றால் என்ன செய்வார்.

லார்ட்ஸ் டெஸ்டில் வெற்றிக்கு காரணமாக இஷாந்த்சர்மா காயம் காரணமாக 3–வது டெஸ்டில் ஆடவில்லை. இது அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. 4–வது டெஸ்டிலும் அவர் ஆடுவதற்கான வாய்ப்பு குறைவே.இதேபோல புவனேஸ்வர் குமாரும் காயம் அடைந்துள்ளார். அவரும் மான்செஸ்டர் டெஸ்டில் விளையாடுவது சந்தேகமே. இதன் காரணமாகவே வருண் ஆரோனுக்கு வாய்ப்பு அளிக்க கங்குலி வலியுறுத்தி உள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி