செய்திகள்,திரையுலகம் இணையத்தில் வெளியான நடிகை அஞ்சலி திவிவேதியின் நிர்வாண படங்கள்!…நடிகை போலீசில் புகார்…

இணையத்தில் வெளியான நடிகை அஞ்சலி திவிவேதியின் நிர்வாண படங்கள்!…நடிகை போலீசில் புகார்…

இணையத்தில் வெளியான நடிகை அஞ்சலி திவிவேதியின் நிர்வாண படங்கள்!…நடிகை போலீசில் புகார்… post thumbnail image
சென்னை:-தெலுங்கு படங்களில் வளர்ந்து வரும் நடிகை அஞ்சலி திவிவேதி. மத்திய பிரதேசத்தை சேர்ந்த இவர் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். தற்போது இந்தி படங்களில் நடிப்பதற்காக மும்பை மலாடு பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வாய்ப்பு தேடி வருகிறார்.

பட வாய்ப்புக்காக அஞ்சலி திவிவேதி தான் தனியாக போட்டோ ஷூட் நடத்தி எடுத்த புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனங்களிடம் கொடுத்திருக்கிறார். இந்த புகைப்படங்களை மார்பிங் செய்து நிர்வாணமாக போஸ் கொடுத்திருப்பது போன்று யாரோ சிலர் அவர் பெயரில் டுவிட்டர் கணக்கு துவங்கி அதில் வெளியிட்டுள்ளனர்.

இதனை நண்பர்கள் மூலம் அறிந்து அதிர்ச்சி அடைந்த அஞ்சலி, மால்வாணி போலீஸ் நிலையத்துக்கு நேரில் சென்று புகார் கொடுத்தார். போலீசார் உடனடி நடவடிக்கை எடுத்து போலி டுவிட்டர் கணக்கை முடக்கினர். போலி டுவிட்டர் கணக்கை துவக்கியவர்களை தேடி வருகிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி