செய்திகள்,திரையுலகம் கெஸ்ட் ரோலில் நடிக்க ஆசைப்படும் நடிகர் சூர்யா!…

கெஸ்ட் ரோலில் நடிக்க ஆசைப்படும் நடிகர் சூர்யா!…

கெஸ்ட் ரோலில் நடிக்க ஆசைப்படும் நடிகர் சூர்யா!… post thumbnail image
சென்னை:-லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா-சமந்தா நடித்துள்ள அஞ்சான் தெலுங்குப்பதிப்பின் ஆடியோ விழா ஐதராபாத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் ராஜமவுலியும் கலந்து கொண்டார். அப்போது பேசிய சூர்யா, இந்திய சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ராஜமவுலி குறிப்பிடத்தக்கவர். தற்போது அவர் பாகுபலி என்ற படத்தை இதுவரை இநதியாவில் தயாரிக்கப்படாத மெகா பட்ஜெட்டில் தயாரித்துக்கொண்டிருக்கிறார்.

அவரது டைரக்ஷனில் நடிக்க சான்ஸ் கிடைக்காதா? என்று பல நடிகர்கள் ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், முன்பு ஒருமுறை அவர் என்னை நடிக்க அழைத்தபோது நான் மறுத்து விட்டேன். அது எவ்வளவு பெரிய தவறு என்பதை பின்னர்தான் உணர்ந்தேன். அதனால் இப்போது அவர் இயக்கிக்கொண்டிருக்கும் பாகுபாலி படத்தில் ஒரு காட்சியில் என்னை நடிக்க சொன்னாலும் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி