செய்திகள்,திரையுலகம் இயக்குனர்களுக்கு ஐஸ் வைத்த சூர்யா, நாகார்ஜூனா!…

இயக்குனர்களுக்கு ஐஸ் வைத்த சூர்யா, நாகார்ஜூனா!…

இயக்குனர்களுக்கு ஐஸ் வைத்த சூர்யா, நாகார்ஜூனா!… post thumbnail image
சென்னை:-சூர்யா, சமந்தா, சூரி, வித்யூத் ஜம்வால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘அஞ்சான்’.லிங்குசாமி தயாரித்து இயக்கியிருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அஞ்சான் திரைப்படம் தெலுங்கில் சிக்கந்தர் என்ற பெயரில் வெளியாக உள்ளது. இந்நிலையில் தெலுங்கு பதிப்பின் இசை வெளியீடு சில தினங்களுக்கு முன் ஐதராபாத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் தெலுங்கு மாஸ் நடிகர் நாகார்ஜூனா கலந்து கொண்டு இசையை வெளியிட, இயக்குனர் ராஜமெளலி பெற்றுக் கொண்டார். விழாவில் பேசிய சூர்யா, ராஜமெளலி இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா? என்று பல நடிகர்கள் ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள். முன்பு ஒருமுறை அந்த வாய்ப்பு எனக்கு வந்தது. ஆனால் நான் அதை மறுத்து விட்டேன். அதனால் தற்போது அவர் இயக்கிக்கொண்டிருக்கும் பாகுபலி படத்தில் ஒரு காட்சியில் தலைகாட்டச் சொன்னாலும் கூட தயாராக இருக்கிறேன் என்று தனது விருப்பத்தை அப்போது வெளிப்படுத்தினார்.

இதேபோல் தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவும் லிங்குசாமி இயக்கத்தில் நடிக்க விரும்புவதாக தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது, இயக்குனர் லிங்குசாமியின் அனைத்து படங்களையும் நான் பார்த்திருக்கிறேன். எனக்கும் இப்போது ஒரு பெரிய ஆசை உள்ளது. இன்னொரு தடவை செயினை அறுத்து இழுக்கற சீனை, லிங்குசாமியோட படத்துலதான் செய்யணும்னு நினைக்கிறேன் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி