செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் அமிதாப் பச்சனின் கோன் பனேகா க்ரோர்பதி மீண்டும் துவங்கியது!…

அமிதாப் பச்சனின் கோன் பனேகா க்ரோர்பதி மீண்டும் துவங்கியது!…

அமிதாப் பச்சனின் கோன் பனேகா க்ரோர்பதி மீண்டும் துவங்கியது!… post thumbnail image
அகமதாபாத்:-பொதுமக்களின் அறிவுத் திறனை பரிசோதித்து, கோடிக்கணக்கான ரூபாயை பரிசாக அள்ளித் தரும் ‘கோன் பனேகா க்ரோர்பதி’ என்ற நிகழ்ச்சியை கடந்த 2000ம் ஆண்டு முதல் பிரபல இந்தி தனியார் தொலைக்காட்சி சேனல் நடத்தி வருகிறது.இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களிடம் கேள்விக் கணைகளை தொடுக்கும் நிகழ்ச்சி தொகுப்பாளராக 2007-ம் ஆண்டு நீங்கலாக தொடர்ந்து 6 முறை பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் பங்கேற்று வந்துள்ளார்.

இது வரை ஏழு சீசன்கள் நிறைவடைந்து, எட்டாவது சீசனாக இதே நிகழ்ச்சியை மீண்டும் அமிதாப் பச்சனை வைத்து தயாரிக்க திட்டமிடப்பட்டது. இதனையடுத்து, இந்த சீசனின் முதல் நிகழ்ச்சிக்கான் படப்பிடிப்பு குஜராத் மாநிலம் சூரத் நகரில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட அரங்கில் தொடங்கியது.
படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக தனக்கேயுரிய பாணியில் மிடுக்காக உடையணிந்து வந்த அமிதாப் பச்சன்(71), கேள்வி நேரம் தொடங்குவதற்கு முன்னர், அவரது படங்களில் இடம்பெற்ற பிரபல ’சூப்பர் ஹிட்’ பாடல்களுக்கு நடனமாடி ரசிகர்களை மகிழ்வித்தார்.

இந்த சீசனுக்கான ’கோன் பனேகா க்ரோர்பதி’ நிகழ்ச்சியில் மொத்தம் 14 கேள்விகள் இடம்பெறுகின்றன. அனைத்து கேள்விகளுக்கும் சரியாக பதில் அளிக்கும் திறமைசாலி அதிகபட்சமாக 7 கோடி ரூபாய் வரை வெல்ல முடியும்.முதல் போட்டியாளராக சூரத் நகரை சேர்ந்த பெண் தொழிலதிபர் தீபா ஜக்தியானி நேற்று ’ஹாட் சீட்’டில் அமர்ந்து அமிதாப் பச்சனின் கேள்விகளை எதிர்கொண்டார். இந்நிக்ழ்ச்சி வரும் 17ம் தேதி ஒளிபரப்பாக உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி