அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் மோடி தலைமையிலான அரசுக்கு ஜனாதிபதி பாராட்டு!…

மோடி தலைமையிலான அரசுக்கு ஜனாதிபதி பாராட்டு!…

மோடி தலைமையிலான அரசுக்கு ஜனாதிபதி பாராட்டு!… post thumbnail image
கொல்கத்தா:-மேற்கு வங்காளம் மாநில தலைநகர் கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற இந்திய வர்த்தக சபை மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மத்தியில் புதிதாக அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்த்து வருவதற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.இவ்விழாவில் ஜனாதிபதி பேசியதாவது:-

நாட்டில் நிலவி வரும் வறுமையை ஒழிக்க 8 முதல் 9 சதவீத அளவிலான சீரான வளர்ச்சியை நாம் எட்ட வேண்டியுள்ளது. இந்த இலக்கினை அடைய வேண்டும் என்றால் உள்நாட்டு சேமிப்பு மற்றும் உள்நாட்டு முதலீட்டுக்கிடையிலான வெற்றிடத்தை நிரப்ப வேண்டும்.இந்த வெற்றிடத்தை நிரப்பி, முதலீட்டு தேவைகளை ஈடு செய்ய அன்னிய முதலீடுகளின் பங்களிப்பு இன்றியமையாததாக உள்ளது. தற்போதைய அரசு இவ்விவகாரம் தொடர்பாக விழிப்புணர்வுடன் செயல்பட்டு, தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.

நாட்டின் நிதி மந்திரியாக இதற்கு முன்னர் பொறுப்பு வகித்த தனது அனுபவத்தை இவ்விழாவில் மெல்ல கோடிட்டு காட்டிய அவர், 2 ஆண்டுகளுக்கு முன்னர் கொள்கை முடிவுகள் குறித்த நிலைப்பாடுகளை வடிவமைப்பதில் நான் முக்கிய பங்காற்றியுள்ளேன்.ஆனால், தற்போது நான் வகித்து வரும் பதவி எனக்கு விதித்து தந்துள்ள அரசியலமைப்பு சட்டம் சார்ந்த நிர்ப்பந்தங்களால் என்னால் எதுவும் பேச முடியவில்லை. இப்போது, மற்றவர்கள் பேச, நான் கேட்கிறேன் என்று வேடிக்கையாக குறிப்பிட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி