செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவுக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரத்து – ஐ.சி.சி. அறிவிப்பு!…

கிரிக்கெட் வீரர் ஜடேஜாவுக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரத்து – ஐ.சி.சி. அறிவிப்பு!…

கிரிக்கெட் வீரர் ஜடேஜாவுக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரத்து – ஐ.சி.சி. அறிவிப்பு!… post thumbnail image
சவுதம்டன்:-இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் போது, இங்கிலாந்து வீரர் ஆண்டர்சனும் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவும் மோதலில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் ரவீந்திர ஜடேஜா விதிகளை மீறி செயல்பட்டதாக அவருக்கு போட்டி சம்பளத்தில் 50 சதவீதத்தை அபராதம் விதித்தது ஐ.சி.சி.

இதற்கு கேப்டன் தோனியும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பி.சி.சி.ஐ.-ன் சட்ட வல்லுனர்கள் ஐ.சி.சி.யின் தடையை எதிர்த்து அப்பீல் செய்ய முடிவெடுத்திருந்தனர்.இந்நிலையில், 6 மணி நேர விசாரணைக்கு பிறகு, ஆண்டர்சன், ஜடேஜா இருவரும் எந்த தவறும் செய்யவில்லை எனவும், இவ்விவகாரத்தில் ஜடேஜாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்வதாகவும் ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி