செய்திகள்,திரையுலகம் பிறந்த நாளும் இறந்த நாளும் ஒன்றுதான்!… பிரபல இயக்குனரின் பேச்சால் சர்ச்சை…

பிறந்த நாளும் இறந்த நாளும் ஒன்றுதான்!… பிரபல இயக்குனரின் பேச்சால் சர்ச்சை…

பிறந்த நாளும் இறந்த நாளும் ஒன்றுதான்!… பிரபல இயக்குனரின் பேச்சால் சர்ச்சை… post thumbnail image
சென்னை:-இயக்குனர் ராம்கோபால் வர்மா எதையாவது ஒன்றைச் சொல்லி அதை சர்ச்சையாக மாற்றுவதில் கை தேர்ந்தவர். சமீப காலமாக டுவிட்டர் மூலம் இவர் வெளியிடும் ஒவ்வொரு கருத்துக்களும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. பத்திரிகையாளர்களுடன் மோதல், விமர்சகர்களுடன் மோதல், என எதையாவது செய்து பரபரப்பான செய்திகளில் இடம் பெறுவது அவருக்கு வழக்கமாகி விட்டது.

தெலுங்கின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரும், நடிகை ரம்யா கிருஷ்ணனின் கணவருமான கிருஷ்ணவம்சி சில தினங்களுக்கு முன் அவருடைய பிறந்தநாளைக் கொண்டாடினார். இவர் ஆரம்ப காலங்களில் ராம்கோபால் வர்மாவிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். அதன் பின் இயக்குனராக அறிமுகமாகி பல ஹிட் படங்களைக் கொடுத்தவர். தற்போது ராம் சரண் தேஜா, காஜல் அகர்வால் நடிக்கும் ‘கோவிந்துடு அந்தாரிவாடிலே’ படத்தை இயக்கி வருகிறார்.

இவருக்கு ராம்கோபால் வர்மா பிறந்த நாள் வாழ்த்துக் கூறியது ஒரு புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பொதுவாக பிறந்த நாள் வாழ்த்தில் அனைவரும் வாழ்த்துதான் தெரிவிப்பார்கள். ஆனால், ராம்கோபால் வர்மா வம்சி காரு பிறந்த நாளும், இறந்த நாளும் அசிங்கமான ஒன்றுதான், ஆனால் சில முட்டாள்தனமான காரணத்தால் உங்களைப் பொருட்டு, அது வித்தியாசமாக அமைகிறது. உங்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள் எனக் கூறியிருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி