செய்திகள்,திரையுலகம் தயாரிப்பாளரை வில்லனாக்கிய இயக்குனர் பாலா!…

தயாரிப்பாளரை வில்லனாக்கிய இயக்குனர் பாலா!…

தயாரிப்பாளரை வில்லனாக்கிய இயக்குனர் பாலா!… post thumbnail image
சென்னை:-இயக்குனர் பாலா இப்போது சசிகுமார்வரலட்சுமியை வைத்து இயக்கி வரும் தாரை தப்பட்டை படத்திற்க்காக கடந்த சில மாதங்களாக தீவிரமாக வில்லன் நடிகரை தேடி வந்தார்.ஆனால், சினிமாக்களில் நடித்து வரும் வில்லனாக அவர் தேடவில்லை. இதுவரை நடிக்காத வித்தியாசமான வில்லனாக தேடி வந்தார்.

அப்படி அவர் தேடிவந்தபோது அவரது கண்ணில் பட்டவர்தான் ஸ்டுடியோ 9 சுரேஷ். தனது வில்லன் கதாபாத்திரததிற்கு நன்றாக பொருந்துவார் என்று நினைத்த பாலா, அவரை அழைத்து பேசியிருக்கிறார்.
நடிக்க வேண்டும் என்றதும் முதலில் அவர் தயங்கினாராம். அதன்பிறகு பாலா கதையை விளக்கியபோது, நீங்கள் சொல்லித்தருவதை அப்படியே செய்கிறேன்.

மற்றபடி எனக்கு நடிப்பைப்பற்றி எதுவும் தெரியாது எனறு சொன்னாராம். அதற்கு, எனக்கும் அந்த மாதிரி வில்லன்தான் தேவை என்று சொல்லி அவர் புக் பண்ணி விட்டாராம்.அதோடு, இந்த தாரை தப்பட்டை வெளிவந்தால், தமிழ் சினிமாவின் அடுத்த மெகா வில்லன் நீங்கள்தான். இந்த கதை அந்த அளவுக்கு உங்களை பிரமாண்டமாக்கி காட்டும் என்றும் நம்பிக்கை கொடுத்துள்ளாராம் பாலா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி