செய்திகள்,திரையுலகம் சூர்யா, சித்தார்த்துக்கு வழி விட்ட நடிகர் பார்த்திபன்!…

சூர்யா, சித்தார்த்துக்கு வழி விட்ட நடிகர் பார்த்திபன்!…

சூர்யா, சித்தார்த்துக்கு வழி விட்ட நடிகர் பார்த்திபன்!… post thumbnail image
சென்னை:-தனுஷின் படங்கள் சமீபகாலமாக தொடர் தோல்விகளை சந்தித்து வந்ததால், அவரது வேலையில்லா பட்டதாரி படத்தை யாருமே ஒரு பொருட்டாகவோ, போட்டியாகவே நினைக்கவில்லை. அதனால்தான் அந்த படம் ரிலீசாகி ஒரே வாரத்தில் சித்தார்த்தின் ஜிகர்தண்டாவை வெளியிட திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், வேலையில்லா பட்டதாரி ஹிட்டடித்து விட்டது. கூடவே சதுரங்க வேட்டையும் சேர்ந்து கொண்டது. அதனால், ஜூலை 25-ந்தேதி வெளியாக வேண்டிய ஜிகர்தண்டா ஆகஸ்ட்1ம் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து ஆகஸ்ட் 15ம் தேதி சூர்யாவின் அஞ்சான் வெளியாகிறது. ஆக, அடுத்த மாதம் வெளியாக வேண்டிய சில படங்கள் தாமதமாகி வருகின்றன.

குறிப்பாக, ஆகஸ்ட் 1ம் தேதி தனது கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தை வெளியிடுவதாக ஏற்கனவே அறிவித்திருந்த பார்த்திபன், இப்போது ஆகஸ்ட் 1ல் ஜிகர்தண்டா வருவதால், மாற்று தேதியை தேடினார். ஆனால் ஆகஸ்ட் 15-ந்தேதி அஞ்சான் வருவதால். பிரபல நடிகர்களின் படங்களுடன் புதுமுகங்கள நடித்துள்ள தனது படத்தை வெளியிட்டால் வெற்றி பாதிக்கும் என்று ரிலீஸ் தேதியை ஆகஸ்ட் 29க்கு மாற்றி விட்டார் பார்த்திபன். மேலும், அஞ்சான் 2 வாரம் ஹவுஸ்புல்லாக ஓடும் என்று எதிர்பார்க்கிற இந்த நிலையில், வெற்றி தோல்வியில் மாற்றங்கள் ஏற்பட்டால் இந்த முடிவிலும் மாற்றம் வரலாம் என்று தெரிகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி