செய்திகள்,திரையுலகம் தமிழில் படம் தயாரிக்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்!…

தமிழில் படம் தயாரிக்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்!…

தமிழில் படம் தயாரிக்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்!… post thumbnail image
சென்னை:-இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். இந்த நிறுவனத்தின் மூலம் முதல் கட்டமாக தன்னுடைய கதை ஒன்றை இந்தியில் படமாக்க இருக்கிறார். அடுத்த கட்டமாக தமிழில் இரண்டு படங்களை தயாரிக்க இருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: வாழ்க்கை தரும் அனுபவங்கள், பயணங்கள் காட்டும் மனிதர்கள். நமக்குள்ளே கதைகளை ஒருவாக்குகிறது. எனக்குள்ளும் நிறைய கதைகளை உருவாக்கி இருக்கிறது. அவற்றில் சிறந்த ஒன்றை தேர்வு செய்து படமாக எடுக்கிறேன். 20 வயதுள்ள புதுமுக ஹீரோ நடிக்கிறார். இயக்குனரும் தேர்வாகி விட்டார், எனது நிறுவனத்துடன் இணைந்து ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

இந்த பணிகள் முடிந்ததும் தமிழில் படம் தயாரிக்கிறேன். ஒரே நேரத்தில் இரண்டு படங்களை தயாரிக்கும் திட்டம் உள்ளது. இதற்கான பணிகளும் தொடங்கி விட்டது. சினிமா இயக்கும் எண்ணம் இல்லை. அது பெரிய பொறுப்பு. எதை என்னால் சுமக்க முடியாது என்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி