செய்திகள் சாப்ட்வேர் என்ஜினீயரை கற்பழித்து மிரட்டிய பேஸ்புக் நண்பன்!…

சாப்ட்வேர் என்ஜினீயரை கற்பழித்து மிரட்டிய பேஸ்புக் நண்பன்!…

சாப்ட்வேர் என்ஜினீயரை கற்பழித்து மிரட்டிய பேஸ்புக் நண்பன்!… post thumbnail image
இந்தூர்:-இந்தூரில் 23 வயது சாப்ட்வேர் பெண் என்ஜினீயர் ஒருவரை கற்பழித்ததுடன் ஆபாசமாக படமெடுத்து மிரட்டிய பொறியியல் மாணவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.அப்பெண் போலீசில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது, குஜராத் மாநிலம் பவ்நகரை சேர்ந்த 25 வயதான ரிஷாப் கட்டோடியா சமூக வலைத்தளமான பேஸ்புக் மூலம் எனக்கு அறிமுகமானார்.

கடந்த ஜனவரி மாதத்தில் இந்தூருக்கு வந்த ரிஷாப் இயற்கையை ரசிக்கலாம் என்று கூறி என்னை அழைத்துச் சென்றார். அப்போது மயக்க மருந்து கலந்த காபியை எனக்கு அவர் கொடுத்தார். அதை பருகிய சிறிது நேரத்தில் நான் மயங்கிவிட்டேன். அந்த சமயத்தில் ரிஷாப் தனது செல்போனில் என்னை ஆபாசமாக படமெடுத்துக்கொண்டார். இரண்டு மாதங்களுக்கு பின் என்னை அழைத்த அவர், எனது ஆபாச வீடியோ காட்சிகளை வலைத்தளத்தில் வெளியிடப்போவதாக மிரட்டினார். இவ்வாறு மிரட்டி என்னை வதோதரா நகருக்கு வரவழைத்த அவர் தொடர்ந்து மூன்று நாட்கள் என்னை கற்பழித்தார்.

அதன்பின் தனது ஆபாச காட்சிகளில் சிலவற்றை செல்போனில் இருந்து அவன் நீக்கிய பின், நான் இந்தூருக்கு வந்துவிட்டேன். சில நாட்கள் கழித்து எனது ஆபாசப் புகைப்படங்களை எனக்கு அனுப்பிய அவன், அவனை திருமணம் செய்துகொள்ளுமாறு மிரட்டினான். அவனை நான் திருமணம் செய்ய மறுத்தபோது, என்னை கொன்றுவிடுவதாக அவன் மிரட்டினான். அதனால் மிரண்டு போன நான் அவன் அனுப்பிய புகைப்படங்களை எனது பெற்றோரிடம் கொடுத்தேன். அவர்கள் தெரிவித்த ஆலோசனையின் படி தற்போது காவல்துறையில் புகார் அளித்துள்ளேன்.இவ்வாறு புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.அவரது புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் ரிஷாப்பை பிடிக்க வியூகம் வகுத்தனர். போலீசாரின் திட்டப்படி, ரிஷாப்பை இந்தூருக்கு வருமாறு அப்பெண் அழைப்பு விடுத்தார். அதனை நம்பிய மிரட்டல் பேர்வழி ரிஷாப்பும் இந்தூருக்கு வந்தபோது போலீசார் விரித்த வலையில் சிக்கி கைதானான். பின்னர் அவன் மீது கற்பழிப்பு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி