செய்திகள்,திரையுலகம் அஞ்சான் இசை விழாவுக்கு வர பணம் கேட்டாரா நடிகை சமந்தா!…

அஞ்சான் இசை விழாவுக்கு வர பணம் கேட்டாரா நடிகை சமந்தா!…

அஞ்சான் இசை விழாவுக்கு வர பணம் கேட்டாரா நடிகை சமந்தா!… post thumbnail image
சென்னை:-நடிகை சமந்தா கடந்த வாரம் அஞ்சான் படத்தின் இசை வெளியீடு, பாடல்கள் திரையீடு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது சர்ச்சையை எழுப்பியுள்ளது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சமந்தா, மேற்கொண்டு பணம் வேண்டும் என்று கேட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் தான் நடிக்கும் எந்தப் படமாக இருந்தாலும் தவறாமல் கலந்து கொள்ளும் சமந்தா, தமிழில் முதன்முதலாக ஒரு பெரிய ஹீரோவுடன் நடிக்கும் படத்தின் விழாவுக்கு வராமல் போனது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.

இதனால் படத்தின் ஹீரோவான சூர்யாவும் கடுப்பாகி விட்டாராம். அடுத்து சமந்தா, விஜய்யுடன் நடிக்கும் கத்தி படத்தின் விழாக்களில் கலந்து கொண்டால் இந்தப் பிரச்சனை மேலும் பெரிதாக வாய்ப்புள்ளது.படத்தில் நடிக்கும் நடிகைகளுக்காகவும் சில படங்கள் ஓடுகின்றன. அவர்கள் வந்தால்தான் புகைப்படக் கலைஞர்களும் புகைப்படங்களாக எடுத்துத் தள்ளுகிறார்கள். நடிகைகள் கலந்து கொள்ளும் விழாக்களை மட்டுமே மீடியாக்கள் அதிகம் வெளியிடுகின்றன. அப்படியிருக்க இம்மாதிரியான விழாக்களில் அவர்கள் கலந்து கொள்ளாமல் இருப்பதை சில இயக்குனர்கள் கடுமையாக எதிர்க்கிறார்களாம். அப்படிப்பட்ட நாயகிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பேசி வருகிறார்களாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி