செய்திகள்,திரையுலகம் காமெடி படத்துக்காக மொட்டை போட்ட பிரபல நடிகர்!…

காமெடி படத்துக்காக மொட்டை போட்ட பிரபல நடிகர்!…

காமெடி படத்துக்காக மொட்டை போட்ட பிரபல நடிகர்!… post thumbnail image
சென்னை:-மலையாள சினிமாவில் முக்கிய நடிகர்களான மோகன்லால், மம்மூட்டிக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் இருப்பவர் சுரேஷ்கோபி. பெரும்பாலும் கரடுமுரடான கதைகள், கதாபாத்திரங்களில்தான் இவர் நடித்திருக்கிறார். அந்த வகையில், மலையாள சினிமாவில் முக்கிய ஆக்சன் ஹீரோவாக திகழ்பவர் சுரேஷ் கோபி.

ஆனால், அப்படி தான் நடித்த எந்த படத்துக்கும் இதுவரை மொட்டையடித்து நடிக்காத அவர், டிவின் என்பவர் இயக்கும் மாலூட்டி பாபு என்ற காமெடி கதைக்காக இப்போது மொட்டையடித்துள்ளாராம். இதற்கு முக்கிய காரணம், கதை என்றாலும், ஆக்சன் ஹீரோவான சுரேஷ்கோபிக்கு வித்தியாசமான காமெடி ஸ்கிரிப்ட்டில் நடிக்க வேண்டும் என்பது நீண்டகால கனவாம்.

அதனால் தான் எதிர்பார்த்தது போன்ற கதை கிடத்ததோடு, அந்த கதைக்கு கண்டிப்பாக மொட்டையடிக்க வேண்டும் என்று டைரக்டர் கேட்டுக்கொண்டதால், துளியும யோசிக்காமல் மொட்டையடித்து நடித்துள்ளாராம் அவர். இதையடுத்து இனி தொடர்ந்து காமெடி கதைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்போவதாகவும் கூறி வரும் சுரேஷ்கோபி, கேரளாவில் உள்ள காமெடி ரைட்டர்களை அணுகி தனக்கான கதைகளை ரெடி பண்ணுமாறு கேட்டுக்கொண்டு வருகிறாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி