செய்திகள்,திரையுலகம் நடிகை சமந்தா மீது கோபத்தில் இருக்கும் சூர்யா!…

நடிகை சமந்தா மீது கோபத்தில் இருக்கும் சூர்யா!…

நடிகை சமந்தா மீது கோபத்தில் இருக்கும் சூர்யா!… post thumbnail image
சென்னை:-சமீபத்தில் நடைபெற்ற ‘அஞ்சான்‘ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சமந்தா வரவில்லை. அவர் தெலுங்குப் படம் ஒன்றின் படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றிருந்தார் என்று தகவல்கள் வெளியாகின. அதோடு திரும்பி வந்த பின் அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால்தான் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை என்று அவரே சொல்லியிருந்தார்.

ஆனால், மறுநாளே ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும், அதற்கடுத்து ஹைதராபாத்தில் ‘ரபாஷா’ படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார்.இதனால் சமந்தா மீது சூர்யா கோபமாக உள்ளார் என்று தெரிகிறது. ‘அஞ்சான்’ படத்தில் சமந்தா நடிக்க ஆரம்பித்த பின்தான் அவரை விஜய் படத்திற்கும், விக்ரம் படத்திற்கும் ஒப்பந்தம் செய்தார்கள்.

மேலும் ‘அஞ்சான்’ படத்தின் மூலம் தான் தமிழில் ரீ-என்ட்ரி ஆக வேண்டும் என்று சமந்தா எதிர்பார்ப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த சூழ்நிலையில் சமந்தா ‘அஞ்சான்’ படத்தில் அவருக்கு முக்கியத்துவம் இல்லாத காரணத்தாலேயே ஆடியோ விழாவைப் புறக்கணித்ததாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி