செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு ஆண்டர்சனுடன் மோதல்: ரவீந்திர ஜடேஜாவுக்கு அபராதம்!…

ஆண்டர்சனுடன் மோதல்: ரவீந்திர ஜடேஜாவுக்கு அபராதம்!…

ஆண்டர்சனுடன் மோதல்: ரவீந்திர ஜடேஜாவுக்கு அபராதம்!… post thumbnail image
லண்டன்:-இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சனும், இந்திய ஆல் ரவுண்டர் ஜடேஜாவும் மோதிக்கொண்டனர். இது சம்பந்தமாக ஐ.சி.சி.யில் இந்தியா புகார் செய்தது.ஆண்டர்சன் மீது விசாரணை மேற்கொண்ட ஐ.சி.சி. அந்த வழக்கை ஆகஸ்ட் 1-ந்தேதிக்கு தள்ளி வைத்தது.

இந்நிலையில் இன்று ஜடேஜா மீதான விசாரணை நடைபெற்றது. இங்கிலாந்து அணியின் மானேஜர், ஜடேஜா மீது ஐ.சி.சி. நடத்தை விதி 2-ஐ மீறியதாக புகார் செய்திருந்தார். இதை விசாரித்த ஐ.சி.சி., ஜடேஜாவுக்கு 1-வது விதியை மீறியதாக போட்டியின் பணத்தில் 50 சதவீதத்தை அபராதமாக செலுத்த உத்தரவிட்டது.இதற்கு ஆட்சேபனை தெரிவித்த இந்திய கிரிக்கெட் வாரியம், ஜடேஜா மீதான குற்றம் நீக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஆண்டர்சன் நடத்தை விதி 3-ஐ மீறியதாக இந்தியா சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி