செய்திகள்,திரையுலகம் ஜோதிகா சினிமாவில் நடிக்க தடை இல்லை – சூர்யா!…

ஜோதிகா சினிமாவில் நடிக்க தடை இல்லை – சூர்யா!…

ஜோதிகா சினிமாவில் நடிக்க தடை இல்லை – சூர்யா!… post thumbnail image
சென்னை:-திருமணத்திற்கு பிறகு ஜோதிகா சூர்யாவுடன் சில விளம்பர படங்களில் நடித்தார். அகரம் பவுண்டேஷனின் புரமோசன் பாடலில் நடித்தார். ஆனாலும் ஜோதிகாவுக்கு தொடர்ந்து சினிமா அழைப்புகள் வந்து கொண்டே இருந்தது. கடைசியாக சூர்யா தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கும் படத்தில் ஜோதிகாவை நடிக்க வைக்க முயற்சித்தாகவும் கூறப்பட்டது. சூர்யாவின் குடும்பத்தினர் நடிக்க தடை போடுவதால் அவர் நடிக்காமல் இருக்கிறார் என்றும் கூறப்பட்டது. தற்போது ஜோதிகா நடிக்க யாரும் தடைபோடவில்லை என்று சூர்யா கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: ஜோவை நடிக்க கூடாது என்று யாரும் தடைபோடவில்லை. முன்பு என்னை கவனித்துக் கொண்டிருந்தார். இப்போது குழந்தைகளை கவனித்துக் கொண்டிருக்கிறார். என்னோடு ஒப்பிடும்போது ஜோதான் எனக்கும் சேர்த்து குழந்தைகளோடு இருக்கிறார். நான் அவர்களோடு இருப்பது குறைந்த நேரம்தான். ஜோவுக்கு பிடிச்ச கதை அமைந்து, நேரமும் இருந்தால் நிச்சயம் நடிப்பார் என்கிறார் சூர்யா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி