செய்திகள்,திரையுலகம் இரவு தூக்கத்தை மறந்த நடிகர் அஜீத்!…

இரவு தூக்கத்தை மறந்த நடிகர் அஜீத்!…

இரவு தூக்கத்தை மறந்த நடிகர் அஜீத்!… post thumbnail image
சென்னை:-மங்காத்தா, ஆரம்பம், வீரம் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தனது 55வது படத்தில் உற்சாகமாக நடித்துக்கொண்டிருக்கிறார் அஜீத். முன்பெல்லாம் தனது படங்களில் நடித்துக்கொண்டிருக்கும்போது அதிக இடைவெளி எடுத்துக்கொள்ளும் அஜீத், முந்தைய படங்கள் கொடுத்த வெற்றி காரணமாக ஜெட் வேக உற்சாகத்தில் நடித்துக்கொண்டிருககிறார்.

ஆரம்பத்தில் சென்னை ஈசிஆர் சாலை பகுதியில் இரவு நேரங்களில் படப்பிடிபபு நடத்தி வந்த கெளதம்மேனன், பின்னர் வெளிநாடுகளுக்கு சென்று பாடல்களை படமாக்கி விட்டு வந்தவர், மறுபடியும் இரவு நேரங்களில் படப்பிடிப்பை முடுக்கி விட்டுள்ளார். சென்னையை சுற்றி நடக்கும் கதையை மையமாகக்கொண்ட படம் என்பதால், பெரும்பாலான காட்சிகளை ஈசிஆர் சாலையிலேயே படமாக்குகிறார்கள்.

இந்நிலையில், தினமும் இரவு படப்பிடிப்பு என்பதால், பகலில் வெளியில் சுற்றாமல், தூங்கி ஓய்வெடுத்து விட்டே இரவு 10 மணிக்கு மேல் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார் அஜீத். அதனால், இரவு நேரத்தில் தனக்கு ஷாட் இல்லையென்றால்கூட அவர் கேரவனுக்குள் சென்று தூங்குவதில்லையாம். கேமரா அருகில் அமர்ந்தபடி மற்றவர்கள நடிப்பதை கவனிக்கிறாராம். அப்போது தனக்கு தோன்றும் கருத்துகளையும் டைரக்டர் முன் வைக்கிறாராம். அந்த அளவுக்கு படம் நன்றாக வர வேண்டும் என்பதில் அக்கறை காட்டுகிறாராம் அஜீத்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி