செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் நடிகை ரம்பா மீது வரதட்சணை கொடுமை வழக்கு!…

நடிகை ரம்பா மீது வரதட்சணை கொடுமை வழக்கு!…

நடிகை ரம்பா மீது வரதட்சணை கொடுமை வழக்கு!… post thumbnail image
சென்னை:-உழவன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரம்பா. தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது திருமணம் செய்து கொண்டு கனடாவில் கணவருடன் வாழ்ந்து வருகிறார். ரம்பாவின் அண்ணன் சீனிவாச ராவுக்கும், பல்லவி என்பவருக்கும் கடந்த 1999ம் ஆண்டு திருமணம் நடந்தது. இருவருக்கும் இரு குழந்தைகள் உள்ளனர். தற்போது கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கிறார்கள்.

இந்நிலையில் பல்லவி, ஐதராபாத் ஐகோர்ட்டில் வரதட்சணை கொடுமை வழக்கு தாக்கல் செய்துள்ளார். தனது கணவர் சீனிவாசராவும், அவரது தங்கை ரம்பா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வரதட்சணை வாங்கி வருமாறு தன்னை கொடுமைப்படுத்தியதாகவும் அவர்கள் மீது வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது மனுவில் பல்லவி குறிப்பிட்டுள்ளார்.

மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் சீனிவாசராவ், ரம்பா உள்ளிட்டவர்கள் மீது வரதட்சணை கொடுமை வழக்கு பதிவு செய்யுமாறு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து பஞ்சாரா ஹில்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கனடாவில் இருக்கும் ரம்பாவை விசாணைக்கு வருமாறு அழைக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி