செய்திகள்,திரையுலகம் தெலுங்குப் படங்களை தவிர்க்கிறாரா நடிகை ஸ்ருதிஹாசன்!…

தெலுங்குப் படங்களை தவிர்க்கிறாரா நடிகை ஸ்ருதிஹாசன்!…

தெலுங்குப் படங்களை தவிர்க்கிறாரா நடிகை ஸ்ருதிஹாசன்!… post thumbnail image
சென்னை:-ஸ்ருதிஹாசன் தெலுங்கில் நடித்த ‘கப்பார் சிங்’ படம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவர் நடித்த தெலுங்குப் படங்கள் தொடர்ச்சியாக நல்ல வெற்றியையும், தெலுங்கத் திரையுலகில் முன்னணி நடிகை என்ற பெயரையும் வாங்கிக் கொடுத்தன. சமீபத்தில் வெளிவந்த ‘ரேஸ் குர்ரம்’ படம் வரை ஸ்ருதியின் தெலுங்கு மார்க்கெட் ஸ்டடியாகவே உள்ளது.

இந்நிலையில் சமீப காலமாக தெலுங்கில் புதுப் படங்களில் நடிக்க ஸ்ருதிஹாசன் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லையாம்.தற்போது மகேஷ் பாபுவுடன் ஒரே ஒரு தெலுங்குப் படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். அதே சமயம் தமிழில் விஷாலுடன் ‘பூஜை’ படத்தில் நடித்து வருகிறார். விஜய் அடுத்து சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்க இருக்கும் படத்திலும் நாயகியாக ஒப்பந்தமாகியிருக்கிறார்.

அதோடு நான்கைந்து ஹிந்திப் படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார். தமிழில் பெரிய ஹீரோக்களுடன் படங்களில் நடிக்க ஒப்பந்தமானதும், அவர் தெலுங்குத் திரையுலகை கண்டு கொள்ளவில்லை என அங்குள்ளவர்கள் பேச ஆரம்பித்து விட்டார்களாம். ஆனாலும், ஸ்ருதிஹாசன் தமிழ்த் திரையுலகிலும் ஒரு முன்னணி இடத்தைப் பிடிக்க ஆர்வமாக உள்ளார் என இங்குள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி