சென்னை:-சூர்யா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அஞ்சான் படத்தின் பாடல்கள் வெளிவந்தது. பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வரும் நிலையில் ஒரு அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.படத்தின் பாடல்கள் அதற்குள் நெட்டில் வந்ததாகவும், மேலும் சில பாடல் காட்சிகளும் வந்துவிட்டதாக தகவல் வந்தது.
இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன் தன் டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.இதில், இந்த காட்சிகளை நாங்கள் இணையத்தளத்தில் இருந்து நீக்கிவிட்டோம், அந்த கிரிமன்ல்களை கைது செய்ய புகார் கொடுக்க இருக்கிறோம் என்று கோபத்துடன் தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி