செய்திகள் திருடிய ஆடைகளுடன் போட்டோ எடுத்து பேஸ்புக்கில் போட்ட கர்ப்பிணி பெண்!…

திருடிய ஆடைகளுடன் போட்டோ எடுத்து பேஸ்புக்கில் போட்ட கர்ப்பிணி பெண்!…

திருடிய ஆடைகளுடன் போட்டோ எடுத்து பேஸ்புக்கில் போட்ட கர்ப்பிணி பெண்!… post thumbnail image
மேற்கு பிராங்க்போர்ட்:-மேற்கு பிராங்க்போர்ட் ஜவுளிகடை ஒன்றில் டேனியல் சாக்ஸ்டோன் என்ற கர்ப்பிணி பெண் துணிகள் வாங்க வந்தார். ஆனால் அவர் வந்து விட்டு கடையின் மறுபக்க வழியாக சென்று விட்டார். அந்த பெண் சென்ற பிறகு கடையில் இருந்த சில துணிகள் மட்டும் சில அணிகலன்கள் திருட்டு போய் இருப்பது கண்டு பிடிக்கபட்டது.

இதை தொடரந்து மற்றொரு உரிமையாளர் பாதுகாப்பு கேமிராவில் பதிவாகி இருந்த டேனியல் சாக்ஸ்டோன் படத்தை தங்களது ஜவுளிக்கடை பேஸ்புக் பக்கத்தில் போட்டு இவரை அறிந்தவர்கள் தகவல் தெரிவிக்கவும் என பதிவு செய்தார்.பிராங்போர்ட் சிறை நகரம் ஆகும். இங்கு மொத்தம் 10 ஆயிரம் குடியிருப்புகளுக்கும் குறைவாகவே உள்ளது.

மேலும் சாக்ஸ்டோன் திருடிய ஆடைகளை அணிந்து கொண்டு புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் பதிவு செய்து வைத்து இருந்தார். இதனால் ஜவுலிக்கடையின் பதிவும், சக்ஸ்டோனின் பதிவையும் பார்த்தவர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.இதனால் சில மணி நேரங்களில் சாக்ஸ்டோன் கைது செய்யபட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி