செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு கிரிக்கெட் வீரர் சச்சினின் பெருந்தன்மை!…

கிரிக்கெட் வீரர் சச்சினின் பெருந்தன்மை!…

கிரிக்கெட் வீரர் சச்சினின் பெருந்தன்மை!… post thumbnail image
புதுடெல்லி:-பொதுவாக ஓய்வு நேரங்களில் சச்சின் டென்னிஸ் போட்டியை நேரில் கண்டுகளிப்பார். அப்படித் தான் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை நேரில் பார்க்க லண்டன் சென்றார். அப்போது நடைபெற்ற ஒரு போட்டியை தெண்டுல்கர் வி.ஐ.பி. இருக்கையில் இருந்து நேரில் கண்டுகளித்தார். அப்போது அவருடன் இங்கிலாந்தின் பிரபல முன்னாள் கால்பந்து வீரட் டேவிட் பெக்காம் மற்றும் கோல்ப் வீரர் இயான் பௌல்டர் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

அப்போது வி.ஐ.பி. இருக்கையில் யாரெல்லாம் இருந்தார்கள் என்று ஷரபோவா நினைவு கூர்கையில், அவருக்கு மிகவும் பிடித்தவரும் பழக்கமுடைய பெக்காம் இருந்தார் என்று கூறினார். ஆனால் அவர் அருகில் இருந்த சச்சினை பற்றி அவர் எதுவும் கூறவில்லை. இதுகுறித்து ஒருவர் ஷரபோவாவிடம் பெக்காம் அருகில் சச்சின் இருந்தார் அல்லவா? என்று கேட்டார். அதற்கு ஷரபோவா சச்சின் யாரென்று எனக்கு தெரியாது என்று பதில் அளித்திருந்தார்.

ஷரபோவாவின் இந்த கருத்துக்கு எதிராக சச்சின் ரசிகர்கள் பொங்கி எழுந்துவிட்டனர். ஷரபோவாவின் டுவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கத்திலும் அவருக்கு கடும் கண்டனங்களை அவர்கள் தெரிவித்தனர். ஆனால் ஷரபோவா இது குறித்து கோபமடையாமல் அமைதியாக இருந்துவிட்டார். இந்நிலையில் இன்று ஷரபோவாவின் கருத்து பற்றி சச்சின் கருத்து தெரிவித்தார்.அதில் ஷரபோவாவின் கருத்து அவமானப்படுத்துவதாக கருதக்கூடாது என்றார். அவர் கிரிக்கெட் பார்க்காதவறாக இருப்பார், அதனால் தன்னை பற்றி அவருக்கு தெரிந்திருக்காது என்று சச்சின் பெருந்தன்மையாக பேசினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி