செய்திகள்,திரையுலகம் எரியும் சிகரெட்டை எனது முகத்தில் நெஸ் வாடியா எறிந்தார் – நடிகை பிரீத்தி ஜிந்தா தகவல்!…

எரியும் சிகரெட்டை எனது முகத்தில் நெஸ் வாடியா எறிந்தார் – நடிகை பிரீத்தி ஜிந்தா தகவல்!…

எரியும் சிகரெட்டை எனது முகத்தில் நெஸ் வாடியா எறிந்தார் – நடிகை பிரீத்தி ஜிந்தா தகவல்!… post thumbnail image
மும்பை:-மணிரத்னம் இயக்கிய உயிரே படத்தில் நடித்தவரான நடிகை பிரீத்தி ஜிந்தாவும் அவரது முன்னாள் ஆண் நண்பரான நெஸ் வாடியாவும் தற்போது ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடும் பஞ்சாப் அணியின் உரிமையாளராக இருந்து வருகிறார்கள். நடந்து முடிந்த ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் அணியும் மோதிய போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

அப்போது நெஸ் வாடியா தன்னிடம் அத்து மீறி நடந்ததாக பிரீத்தி ஜிந்தா மும்பையிலுள்ள மெரைன் டிரைவ் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரையடுத்து நெஸ் வாடியா மீது இந்திய தண்டனை சட்டம் 354வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இப்புகார் தொடர்பாக வாடியாவை விசாரித்த போலீசார் அவரை இதுவரை கைது செய்யாமல் இருக்கின்றனர். ப்ரீத்தி தனது புகார் தொடர்பாக கடந்த மாதம் மும்பை போலீசாரிடம் வாக்குமூலமும் அளித்துள்ளார்.இந்நிலையில் தான் தாக்கப்பட்டது தொடர்பாக மேலும் ஒரு பகீர் தகவலை ப்ரீத்தி தற்போது வெளியிட்டுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் அணியும் மோதிய போட்டிக்கு முன்னதாக தன்னை ஒரு அறையில் அடைத்த வாடியா, எரியும் சிகரெட்டை தனது முகத்தில் வீசியதுடன், தன்னிடம் முரட்டுத்தனமாக நடக்க முயற்சித்ததாகவும் மும்பை கமிஷனர் ராகேஷ் மரியாவுக்கு எழுதிய கடிதத்தில் ப்ரீத்தி கூறியுள்ளார்.மேலும் தன்னிடமிருந்து அவர் விலக வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும், அப்போது தான் நிம்மதியாக தன்னால் வாழமுடியும் என கூறியுள்ள அவர், அவ்வாறு வாடியா விலகவில்லை என்றால் தன்னை அவர் கொலை செய்யக்கூடும் என அஞ்சுவதாக தெரிவித்துள்ளார். போலீசாரிடம் புகார் அளித்ததன் மூலம் வாடியாவுக்கு தான் எந்த தீங்கும் செய்யவில்லை என்றும் தனது கடிதத்தில் ப்ரீத்தி குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி