செய்திகள்,திரையுலகம் ஆண்ட்ரியாவுடன் இணைந்து பாடிய சூர்யா!…

ஆண்ட்ரியாவுடன் இணைந்து பாடிய சூர்யா!…

ஆண்ட்ரியாவுடன் இணைந்து பாடிய சூர்யா!… post thumbnail image
சென்னை:-சூர்யாசமந்தா இருவரும் முதன் முறையாக ஜோடி சேர்ந்திருக்கும் படம்தான் அஞ்சான். இப்படத்தினை இயக்குனர் லிங்குசாமி இயக்கி இருக்கிறார்.யு.டி.வி.மோசன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இதனை இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு மும்பை, மஹாராஷ்டிரா, கோவா, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடந்து முடிந்தது.

ஏற்கெனவே படத்தின் டீஸர் வெளியாகி 2 மில்லியன் ஹிட்ஸ் பெற்றுவிட்டது. இந்நிலையில், அஞ்சானில் சூர்யா ஆண்ட்ரியாவுடன் இணைந்து பாடியிருக்கும் ‘ஏக் தோ தீன்’ பாடலின் வரிகளை வெளியிட்டிருக்கின்றனர். படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவிருக்கிறது.

ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி

நான் ஒன்னொண்ணா சொல்லித்தர கத்துக்கோடி

நீ சாஞ்சி பாத்தா சுத்துதடி

நெஞ்சில் தீயா பத்துதடி…

என நா.முத்துகுமார் எழுதியிருக்கும் பாடலை சூர்யா பாடியிருக்கிறார். அதுவும் சூர்யா வெள்ளித்திரையில் பாடும் முதல் பாடல் இது.இப்படம் வருகிற ஆகஸ்டு 15, சுதந்திர தினத்தன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி