செய்திகள்,திரையுலகம் தயாரிப்பாளருடன் நடிகை அமலாபால் திடீர் சமரசம்!…

தயாரிப்பாளருடன் நடிகை அமலாபால் திடீர் சமரசம்!…

தயாரிப்பாளருடன் நடிகை அமலாபால் திடீர் சமரசம்!… post thumbnail image
சென்னை:-அமலாபால், டைரக்டர் விஜய் திருமணம் சமீபத்தில் நடந்தது. திருமணத்துக்கு பிறகு அவர் நடிக்க மாட்டார் என கூறப்பட்டது. இந்நிலையில், அவர் மீண்டும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. திருமணத்துக்கு முன்பு வாஸ்தா நீ வேணுகா என்ற தெலுங்கு படத்தில் அமலாபால் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆகி இருந்தார். ஆனால், அதற்குள் திருமணம் செய்து கொண்டார். அவருடைய திருமணத்தால் கால்ஷீட் தேதிகளில் குளறுபடி ஏற்பட்டு விட்டது என்று அந்தப்படத்தின் தயாரிப்பாளர் குற்றம் சாட்டினார்.

மேலும், வேறு ஒரு நடிகையை அமலாபால் வேடத்தில் நடிக்க வைக்கவும் முயற்சி செய்தார். கடைசியில் அந்தப்படமே டிராப் ஆனது. இந்நிலையில், அவர் மீண்டும் அமலாபாலை அணுகி கால்ஷீட் கேட்டுள்ளார். இதுகுறித்து அமலாபால் கூறியதாவது: வாஸ்தா நீ வேணுகா பட தயாரிப்பாளர் என்னை அணுகியது உண்மைதான். ஆனால், அந்தப் படத்தில் நடிப்பதற்காக அல்ல. வேறு ஓரு படத்துக்காக அணுகினார். அதில் நான் நடிப்பது பற்றி முடிவு செய்யவில்லை. நான் ஏற்கனவே நடித்துள்ள மிலி மற்றும் லைலா ஓ லைலா படங்கள்தான் அடுத்து ரிலீசாக உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி