செய்திகள்,விளையாட்டு இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் தங்கியிருக்கும் ஓட்டலில் பேய் நடமாட்டம்!… அச்சத்தில் வீரர்கள்…

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் தங்கியிருக்கும் ஓட்டலில் பேய் நடமாட்டம்!… அச்சத்தில் வீரர்கள்…

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் தங்கியிருக்கும் ஓட்டலில் பேய் நடமாட்டம்!… அச்சத்தில் வீரர்கள்… post thumbnail image
லண்டன்:-லண்டனில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் கிரிக்கெட் வீரர்கள் தங்கியிருக்கும் லாங்காம் ஓட்டல் கடந்த 1865ம் ஆண்டு கட்டப்பட்டது. தற்போது இது மர்மங்கள் இருக்கும் ஓட்டலாக மாறிவிட்டது. இனிமேல் இங்கு தங்கவே முடியாது என்று கிரிக்கெட் வீரர்களின் மனைவி மற்றும் தோழிகள் மிகவும் அதிர்ச்சியில் தெரிவித்துள்ளனர். இரவு நேரங்களில் மர்ம நிகழ்வுகள் நடப்பதாக அச்சம் தெரிவித்துள்ள அவர்கள் அங்கியிருத்து ஓட்டம்பிடிப்பதில் தயாராக உள்ளனர். உடனடியாக விடுதியை மாற்றும்படி அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பயத்தை வெளிபடுத்தியுள்ள இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட், இலங்கை தொடரின் போது நான் அறையை மாற்ற வேண்டியிருந்தது. அறை மிகவும் உஷ்ணமாக இருந்தது. உறங்க முடியவில்லை. குளியலறையில் பைப்கள் தானாகவே திறந்து கொள்கின்றன, அடைத்து கொள்கின்றன. நான் விளக்கைப் போட்டவுடன் பைப் தானாகவே அடைத்து கொள்கின்றன. மீண்டும் விளக்கை அணைத்தவுடன் பைப் தானாகவே திறந்து கொள்கிறது. இதனால் தோழி பியேலியும் பயந்து விட்டாள். மொயின் அறையிலும் இதே போல் நடந்துள்ளது.இந்தியாவுக்கு எதிரான நடப்பு தொடரின் போது பரவாயில்லை, நன்றாக தூங்கினேன்,

ஆனால் இலங்கைக்கு எதிரான தொடரின் போது மிகவும் கஷ்டமான இரவுகளாக அமைந்தது. ஒருநாள் இரவு 1.30 மணி அளவில் நான் விழித்தேன். அப்போது என் அறையில் மர்மமான முறையில் மற்றொருவர் இருப்பது போல் உணர்ந்தேன், நடமாட்டம் இருப்பதை என்னால் உணர முடிந்தது. பென் ஸ்டோக்ஸ் தங்கியிருக்கும் அறை 3 வது தளத்தில் உள்ளது, அங்கு இதைவிட மர்மமான நிகழ்வுகள் ஏற்பட்டதாகத் கூறப்படுகிறது. அறைகளில் ஏதோ ஒன்று மர்மமான முறையில் நடக்கிறது என்பது மட்டும் உண்மை என்று கூறியுள்ளார். இங்கிலாந்து முழுவதும் இது தொடர்பாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி