செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் படப்பிடிப்பில் நடிகை அனுஷ்கா அணிந்து நடித்த தங்க நகைகள் திருட்டு!…

படப்பிடிப்பில் நடிகை அனுஷ்கா அணிந்து நடித்த தங்க நகைகள் திருட்டு!…

படப்பிடிப்பில் நடிகை அனுஷ்கா அணிந்து நடித்த தங்க நகைகள் திருட்டு!… post thumbnail image
சென்னை:-ஆந்திராவில் சுதந்திரத்திற்காக ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய அரசி ராணி ருத்ரமாதேவி. அவரது வரலாறு திரைப்படமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. ராணி ருத்ரமாதேவியாக அனுஷ்கா நடித்து வருகிறார். சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படம் தயாராகி வருகிறது. காட்சிகள் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக அனுஷ்கா ஒரிஜினல் தங்க நகைகளை அணிந்து நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்புகள் ராணி ருத்ரமாதேவி ஆட்சி புரிந்த நானக்ராம்கூடர் என்ற பகுதியில் நடந்து வருகிறது. இதற்காக பெங்களூரில் இருந்து தயாரிப்பாளர் ஒன்றரை கிலோ தங்க நகைகளை வரவழைத்து இருந்தார். அனுஷ்கா ஒரிஜினல் நகை அணிந்தும், மற்ற நடிகர், நடிகைகள் கவரிங் நகைகள் அணிந்தும் நடித்து வந்தனர்.படப்பிடிப்பு முடிந்ததும் இவை தனித்தனி பெட்டிகளில் வைக்கப்பட்டு அறையில் வைத்து பூட்டப்படுவது வழக்கம். அதேபோல நேற்று முன்தினம் மதிய உணவு இடைவேளையின் போது நகைகளை தனிதனி சூட்கேசில் வைத்து பூட்டி தனி அறையில் வைத்தனர்.

இடைவேளை முடிந்து மீண்டும் அனுஷ்காவின் மேக் அப் மேன் தங்க நகை பெட்டியை எடுக்கச் சென்றபோது அது காணாமல் போயிருந்தது. கவரிங் நகை பெட்டி மட்டுமே இருந்துள்ளது.உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு அங்கு பணியில் இருந்த சுமார் 150 தொழிலாளர்களும் பரிசோதிக்கப்பட்டனர். அவர்களிடம் விசாரணையும் நடத்தினர். ஆனாலும் நகை கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் குணசேகரன் ராயதுர்கம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி